siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜூலை, 2024

நாட்டில் லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 ஜூலை, 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 
மேல் மாகாணத்தின், கொழும்பு மாவட்டத்தில் 7, 613 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,453 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,781 பேரும் பதிவாகியுள்ளனர்.
 இந்த மாதத்தில் மாத்திரம் 40,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32,301 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 ஜூலை, 2024

பிரித்தானியா நோக்கி பிரான்ஸில் இருந்து பயணித்த படகு விபத்துக்குள்ளானது

இங்கிலாந்திற்கு  பிரான்சில் இருந்து புறப்பட்ட சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 34 பேர் மீட்கப்பட்டு அவசர சேவைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, கடலில் இன்னும் பல படகுகள் உள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
UK புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,500 பேர் உலகின் பரபரப்பான கப்பல் பாதையை 27 படகுகளில் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மரண அறிவித்தல் ஆசிரிர் திரு சரவணமுத்து கருணாகரன்

துயர் பகிர்வு- தோற்றம்-10-08-1977 -மறைவு-24-07-2024
யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு சரவணமுத்து கருணாகரன்
அவர்கள்.24.07.2024.அன்று  மாலை அச்சுவேலியில் காலமானார். 
அன்னார் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியரும் பிரபல கல்வி நிறுவனங்களின் உயர்தர வகுப்பு தமிழ் ஆசிரியரும் ஆவார் 
 அன்னாரின் இறுதிச் சடங்கு (பெரும்பாலும்) எதிர்வரும்  
ஞாயிற்றுக்கிழமை 28.07.2024 காலை  அச்சு வேலி வடக்கு அச்சுவேலி என்னும் முகவரியில் உள்ள (உலவிக்குளம் பிள்ளையார் அருகில்) அவரது இல்லத்தில் இடம்பெற்று பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!



சனி, 27 ஜூலை, 2024

பாடசாலை காசாவில் மீது தாக்குதல் முப்பது பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. 

இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. 

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்என்பது குறிப்பிடத்தக்கது துள்ளது 


வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ரயிலில் மோதி இருபத்தி ஆறு வயது இளைஞன் மரணம்

நாட்டில்  தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் 
தெரிவித்தனர்.

றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது






வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்

நாட்டில் மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு
 நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  
பொலிரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து 
ஏற்பட்டுள்ளது. 
விபத்தின் பின்னர், கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற பெரும் முயற்சிகளை 
மேற்கொண்டுள்ளனர்.  
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி தொம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் துணுக்காய் பிரதேசத்தில் நெல்லு காவலுக்கு இருந்தவர் மீது துப்பாக்கிசூடு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
 இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார் இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத
 நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார
 அமைப்பின்
 செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் 
படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
 கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு
 நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 23 ஜூலை, 2024

கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டிக்குள் நடந்த கொலை

கொழும்பில் (23.07.2024) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை 
பொலிஸார் கண்டு 
பிடித்தனர். 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த
 தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 22 ஜூலை, 2024

மரண அறிவித்தல் அமரர் ராசரத்தினம் பாலசிங்கம்

துயர் பகிர்வு-மறைவு-22-07-2024.
.யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை
 வதிவிடமாகக் கொண்ட   
 அமரர்  ராசரத்தினம்  பாலசிங்கம் அவர்கள்  22-07-2024.திங்கள்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற  ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத்  தந்தையும் ஆவர்  அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் 
இந்த இணையத்தில் இணைக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


ஞாயிறு, 21 ஜூலை, 2024

எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்

இலங்கையில் கடந்த ஆண்டு, எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
 வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க 
தெரிவித்தார்.
 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் குறிப்பிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

இகிரியகொல்லேவ பகுதியில் எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2024) தினம்தெரிவித்தார்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் 
ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து
 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் 
இன்று (20.07.2024) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2924) தினம்தெரிவித்தார்.
 என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 19 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய 
மாகாணத்தின் டொபினோ பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லாங் பீச் விமான நிலையத்திலிருந்து விபத்து குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தீ பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் பயணிக்க கூடிய ஓர் சிறிய 
விமானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது. 
விமானம் புறப்பட்டு செல்ல எத்தனித்த போது விமானத்தின் எஞ்சினில் தீ பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான விபத்து தொடர்பில் கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளது.
விமானத்திற்கான விமான விபத்திற்கு சரியான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 18 ஜூலை, 2024

அமரர் செல்லையா கனகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024
யாழ்.  ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  அமரர் செல்லையா கனகராசா
  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி  19-07-2024. வெள்ளிக்கிழமை அன்று அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் 
ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்  மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும்   மதங்கியின் மாமனும் 
கமலநாதன் செல்வராணி சற்குணதேவி  அகியோரின்  சகோதனும் சிவாஜினி மகாலிங்கம்  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர் 

 அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
1907-2024 வெள்ளிக்கிழமை   அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையினிலும் ஆத்மா   சாந்திப்பிரத்தனையும்  வீட்டுக்கிருத்திய கிரியைகள்     
21-07-2024.,ஞாயிற்று கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
தொடர்புகளுக்கு  
தொலைபேசி இலக்கம் 
மகன் மயூரன் 
இலங்கை -077 3148435 
வீட்டுமுகவரி  
மூத்தநயினார் கோவில்  ஒழுங்கை
 ஆணைக்கோட் டை 
யாழ்ப்பானம்  
தகவல் குடும்பத்தினர் 




 

புதன், 17 ஜூலை, 2024

எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஓமானில் விபத்துக்குள்ளாது அதில் கடமையாற்றியமூன்று இலங்கையர்கள் மாயம்

ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது. யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் என்ற கப்பலே இவ்வாறு 
விபத்துக்குள்ளாகியுள்ளது.
 கமரூன் நாட்டு கொடியுடன் பயணித்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றே குடைசாய்ந்து, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 கப்பலில் பயணித்த பணியாளர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஜூலை, 2024

பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் குத்திக்கொலை

.உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ். ஆடம்பர கார்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வடிவமைப்பு 
குழுவின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டவர் 
இயன் கெமரூன். 
இங்கிலாந்தை சேர்ந்த இயன் கெமரூன் பல ஆண்டுகளாக ரோல்ஸ் ராய்ஸ் கார் தலைமை வடிவமைப்பாளராக செயலப்ட்டு வந்தார். 
பல ஆண்டுகளாக பணியில் இருந்த இவர் பின்னர்
 பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே, 74 வயதான கெமரூன் ஜெர்மனியின் ஹெர்சிங் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனது மனைவி கெலோஸ் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், இயன் கெமரூன் வீட்டிற்குள் இரவு நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதை தடுக்க முயன்ற கெமரூனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை 
செய்துள்ளனர். 
கொள்ளையர்கள் கெமரூனின் மனைவி கெலோசையும் கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் பண்ணை வீட்டிற்கு அருகே உள்ள வீட்டிற்குள் நுழைந்து உயிர் பிழைத்துள்ளார். 
அங்கிருந்தவாறு அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இயன் கெமரூனின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு கெமரூன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 
இதையடுத்து, கெமரூனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், கெமரூனின் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை
 போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் காரின் 
முன்னாள் தலைமை
 வடிவமைப்பாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் மின்கட்டணம் குறைக்கப்படுகின்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று 
தீர்மானித்துள்ளது.
 இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு ஆணைக்குழு தனது முடிவை பின்வருமாறு அறிவித்தது. இதன்படி, 
வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், 
தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.
 இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழு கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைக்க தீர்மானித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 14 ஜூலை, 2024

கம்போடியா ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாயம்

கம்போடியா நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.
அந்நாட்டின் பர்சட் , ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு
 துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
இதனால், 2 வீரர்களுடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது  




 

சனி, 13 ஜூலை, 2024

யாழ் கச்சாய் தெற்கு பகுதியில் கஞ்சா விற்ற தாயும் மகனும் கைது

யாழ் சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
 நேற்று முன்தினம் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
 கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளார்.
 முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபரான பெண் தனது மகனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும், அதற்காகவே கஞ்சா கையிருப்பை வீட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 12 ஜூலை, 2024

கனமழையால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர்.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. 

இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.

காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 



வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கைப் பெண் நடுவானில் உயிரிழப்பு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இலங்கையை சேர்ந்த பெண்பயணியொருவர் நடுவானில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பயணிகள் விமானமொன்று அவசர அவசரமாக
 பாக்கிஸ்தானின் கராச்சி விமானநிலையத்தில் 
தரையிறங்கியுள்ளது.
 இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்த குறிப்பிட்ட பெண்பயணியின் உடல்நிலை திடீரென 
மோசமடைந்ததாகவும் இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான 
வேண்டுகோளை விடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
 விமானம் தரையிறங்கியதும் உடனடியாக 
பாக்கிஸ்தானின் சிவில்விமான போக்குவரத்து அதிகாரசபையை சேர்ந்தவர்கள் மருத்துவபரிசோதனைக்காக விமானத்திற்குள் 
ஏறியுள்ளனர். அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் விமானநிலையத்தின் மருத்துவ 
அதிகாரி குறிப்பிட்ட பெண்ணிற்கு மரணசான்றிதழை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட விமானம் பெண்ணின் உடலுடன் கொழும்பை நோக்கி பயணிக்கின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 







 

புதன், 10 ஜூலை, 2024

நாட்டில் மன்னார் வீதியில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இளம் தாய் உயிரிழப்பு

புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பாபு துஷ்யந்தினி (வயது 28) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளம் தாய் நேற்றிரவு இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த இளம் தாய் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

 அத்துடன், உயிரிழந்த இளம் தாயின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
என்பது  குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 9 ஜூலை, 2024

பாகிஸ்தானில் வறுமை காரணமாக குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வறுமையின் காரணமாக தயாப் என்ற நபர் தனது 15 நாள் குழந்தையை உயிருடன் 
புதைத்துள்ளார். 
தனது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இத்தகைய மோசமான செயலை செய்ததாக தயாப் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில்,
குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, தயாப் தனது நிதி நெருக்கடி காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 
முடியவில்லை.
எனவே சாக்குப்பையில் வைத்து உயிருடன் குழந்தையைப் புதைத்துள்ளார்” என தெரிவித்தனர்.
 குற்றத்தை ஒப்புக்கொண்ட தயாப் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்பது  குறிப்பிடத்தக்கது.






 

திங்கள், 8 ஜூலை, 2024

தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை மரணம்

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்தார்.
தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து 
மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியது.
இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 என்பது  குறிப்பிடத்தக்கது