siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூலை, 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 
மேல் மாகாணத்தின், கொழும்பு மாவட்டத்தில் 7, 613 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,453 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,781 பேரும் பதிவாகியுள்ளனர்.
 இந்த மாதத்தில் மாத்திரம் 40,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32,301 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக