siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 அக்டோபர், 2020

யாழ் நவற்கிரியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் சாவு

யாழ் – அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக .27-10-20.இன்று மாலை பயணித்துக கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நவற்கிரி விளாத்தியடிப்பாகுதில் மின்னல் வேகத்தில் சென்று மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்தில் 
பலியாகியுள்ளார்
வாகனத்தின் சாரதியான வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணம் செய்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக