siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி யாழில்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிகின்றோம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினராகிய நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நலன் 
விரும்பி ஒருவர் ஊடாக, தங்கி நின்று நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி ஒன்றை ஏற்பாடு
 செய்துள்ளோம்.
எனவே சிரமங்களை தவிர்த்து, நேர்த்தியான நிர்வாக நடவடிக்கைகளை வழங்க முன்கூட்டிய தொடர்பாடல்கள் வழிவகுக்கும் என நம்புகிறோம். எமது நல்லறங்கள் அனைத்தையும் வல்லவன் ரஹ்மான் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
தலைவர் மர்யம் ஜும்ஆ 
மஸ்ஜித் யாழ்ப்பாணம்.
அஷ்ஷைஹ்க் 
Faizer M Aliyar (Casimi Madhani)
0777155119 
 0778831938
இந்த தொலைபேசி நம்பர்  களுடன் தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளனர்  
என்பது குறிப்பிடத்தக்கது.




சனி, 9 டிசம்பர், 2023

நாட்டில் இனி சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை இல்லையாம்

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் 
செலுத்தியுள்ளது.

சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் 
நடமாட்டத்தை 
கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது. 
இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை 
மறுக்க வாய்ப்பு உள்ளது. 
எனவே , பிணை வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாக நம்புவதாக அமைச்சர் கூறினார். என்பதாகும்




 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

வட்டுக்கோட்டை மயான தகனமேடையிலிருந்த இருப்புத் துண்டுகள் திருட்டு

யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை 
ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர் எனக்
 கூறப்படுகின்றது.
 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிசம்பர், 2023

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்தவர்கள் விளக்கமறியலில்

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட மூவர் வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ஆண் மற்றும் இரு பெண்களே மேற்படி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான்  பிரசன்ன அல்விஸ்  இன்று (07.12) இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் புற்று நோயாளர் ஒருவருக்கு பெண் ஒருவர் அழைப்பு விடுத்து அவரது தகவல்களை பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 6 டிசம்பர், 2023

சுமத்ரா தீவில் எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற இடத்தில் எரிமலை வெடித்துள்ளது. இந்நிலையில் குறித்த மலைப்பகுதியில் 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டடிருந்தாக 
தெரவிக்கப்பட்டது . 
அதில் 43 பேர் எரிமலை வெடிப்பு காரணமாக மீண்டும் இறங்கியுள்ளனர். 11 பேர் சடலமாக மீடக்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீடக்கப்பட்ட நிலையில் 12 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர்.
தற்போது காணாமல் போயிருந்த 12 பேரும் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
இதன் காரணமாக குறித்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது என்பதாகும் 

செவ்வாய், 5 டிசம்பர், 2023

நாட்டில் கல்மடு விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கல் நிலை அதிகரிக்கும் நோய்த் தாக்கம்

பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 குறித்த பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக குறித்த தாக்கம் அதிகரித்த 
வண்ணம் உள்ளது. 
 நோய்த் தாக்கத்திற்கு பல தடவைகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயனும் அற்ற நிலையில் பயிர்கள் வளர்ச்சி இன்றி அதே நிலையிலேயே காணப்படுவதாக கவலை 
தெரிவிக்கின்றனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிருமிநாசினிகள் கொள்வனவு செய்து விசிறியும் உரிய பயனை பெற முடியாத நிலையில் 
விவசாயிகள் மிகவும் பதிக்கப்பட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது   


திங்கள், 4 டிசம்பர், 2023

யாழ் மாவட்ட டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் 
விலகியுள்ளனர்.
 தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் 
கையளிக்கப்பட்டது.
 நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட 
வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை 
மேற்கொண்டுள்ளனர்.
 குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 01 ஆம் திகதி முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர்.
 தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது.
 நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட
 வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை
 மேற்கொண்டுள்ளனர்.
 குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 01 ஆம் திகதி முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்தசிறுவன் சந்தேகத்தில் பெண் மேற்பார்வையாளர் கைது

நாட்டில் கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது 
செய்யப்பட்டு குறித்த 
சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில்
 சந்தேகம் இருப்பதாக
 பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி 
வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சிறுவனை 
அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது 


சனி, 2 டிசம்பர், 2023

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் புத்தூர் இளைஞன் பலி

யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   


வெள்ளி, 1 டிசம்பர், 2023

நாட்டில் முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டியின் பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் 
அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளுக்கான போக்குவரத்து 
சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வான்களின் 
 கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக
 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 346 ரூபாவாகும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை
 426 ரூபாவாகும்.
இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 329 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால்; உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 434 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்
 தெரிவித்துள்ளது.
இதேவேளை, கனியவள கூட்டுத்தாபனத்தின் இந்த விலைத்திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையினை திருத்தம் செய்துள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 30 நவம்பர், 2023

பிலிப்பைன்ஸில் உலகின் சோகமான மாலி எனப்படும் யானை உயிரிழப்பு

விலங்குகள் நல ஆர்வலர்களால் "உலகின் சோகமான" (World's 'saddest' elephant) யானை என பெயரிடப்பட்ட "மாலி" எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே 
கழித்துள்ளதாம்.
 'மணிலா' மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன..
மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் அறிவித்துள்ளார். மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

புதன், 29 நவம்பர், 2023

தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்

எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம்.
29-11-2023. இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது
. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் 
காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் 
செயல்படக்கூடியது. 
இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 28 நவம்பர், 2023

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ் சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், 
நுணாவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையினை கண்காணிப்பதற்காக, நீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது



திங்கள், 27 நவம்பர், 2023

ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளனர்.
 இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம்
 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.
 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 
இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும்
 உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி 
உயிர் இழந்துள்ளார்.
 இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கத.
 இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 26 நவம்பர், 2023

பண்ணை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்.26-11-2023. இன்று நோயாளர் காவு வண்டியுடன்,  மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த
 முச்சக்கரவண்டி, 
 நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல 
முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி,  நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் 
சிக்கிக் கொண்டது. 
குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

சனி, 25 நவம்பர், 2023

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் மரணம்

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள்
 உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
 ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும்
 ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
 கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


   

வெள்ளி, 24 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞனின் நீதிமன்றின் உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தன்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு 
தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார் .என்பதும் குறிப்பிடத்தக்கது 








 

வியாழன், 23 நவம்பர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து மூன்று பேர் காயம்

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று, கார்  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம பகுதியில்.23-11-2023. இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், ஆடைத் 
தொழிலாளி உட்பட மூவர் காயமடைந்து
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் கலனிகம போக்குவரத்துப் பொலிஸார் 
தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் மற்றும் பேருந்தில் பயணித்த ஆடைத் தொழிலாளி ஒருவருமே காயமடைந்துள்ளனர். 
பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் 
தெரிவித்தனர். 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது  






 

புதன், 22 நவம்பர், 2023

நாட்டில் பெரிய சாளம்பன் கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை உயிரிழப்பு

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று  21-11-2023.அன்று   
உயிரிழந்துள்ளது.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
யானையின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும்  வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து 
தெரிவித்துள்ளனர்.   
தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் விவசாயிகளும் மக்களும் அங்கலாய்க்கின்றார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 






 

செவ்வாய், 21 நவம்பர், 2023

உயரிய கொவிட்- அலை குறித்து சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை ஜெர்மன் உயிரியலாளர்

 புதிய கோவிட் X இல், ஜெர்மன் மூலக்கூறு உயிரியலாளர் உல்ரிச் எல்லிங் "உயர்ந்த கொரோனா அலை" பற்றி எச்சரிக்கிறார். இருப்பினும், இது அதிக நெரிசலான தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு வழிவகுக்காது.
 "பைரோலா" என்றும் அழைக்கப்படும் புதிய கோவிட்
 மாறுபாடு BA.2.86, பல ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. 2020 மற்றும் 2021 தொற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது நிலைமை கணிசமாக மாறிவிட்டது என்று ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் (BAG) ஒரு 
அறிக்கையில் எழுதுகிறது.
 தற்போதைய அறிவின் படி, அவை ஆபத்தானவை அல்ல. இருப்பினும், நோய்வாய்ப்பட்டவர்கள் தாங்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பெரும்பாலும் தெரியாது மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
அதாவது கொரோனா தொற்று சாதனை அளவை நோக்கி செல்கிறது. ஆஸ்திரிய அறிவியல் அகாடமியில் உள்ள மூலக்கூறு பயோடெக்னாலஜி நிறுவனத்தில் கற்பிக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் ஜெர்மன் 
நுண்ணுயிரியலாளர் உல்ரிச் எலிங், X இல் தனது தனிப்பட்ட சுயவிவரத்தில் இதனைக் கூறினார். ஆகஸ்டில் சுவிட்சர்லாந்திலும் பைரோலாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது.
 LeeWas உடன் இணைந்து பத்திரிகைகள் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் 
எண்ணிக்கை 
அதிகரித்தால், சுவிஸ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டிற்குள்ளும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவச தேவையை தொடர்ந்து 
ஆதரிப்பார்கள்.
 இருப்பினும், நெரிசலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஒருவர் எதிர்பார்க்கவில்லை, "இல்லையெனில் வழக்கமானது," நுண்ணுயிரியலாளர் அதே இடுகையில் எச்சரிக்கிறார். பெரும்பாலான ஐரோப்பிய 
நாடுகளிலும் இதே போக்கு உள்ளது. "புதிதாக தடுப்பூசி போடுவது, முகக்கவசம் அணிவது மற்றும் கவனத்துடன் இருப்பது இப்போது 
புத்திசாலித்தனமாக இருக்கும்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>