யாழ்ப்பாணத்தில் அம்மை மற்றும் கண்நோய் போன்றவை மக்களிடையே பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் தற்போது அதிக அளவு வெப்பம் நிலவுவதால் இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய இந்த நோய்கள் பரவி வருவதாக
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான நோய்கள் காணப்படின் பாதிக்கப்பட்டவரை சுத்தமான இடத்தில் தனிமையில் வைத்து பராமரிக்குமாறு சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
இந்த நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டும்.
இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவு வகைகளை வழங்குமாறும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மருத்துவமனைகளில் உள்ளதால் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற் றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக