siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 மார்ச், 2019

பாரிய பாதிப்பு யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த இரு மாவட்டங்களிலும் 7 ஆயிரத்து 350 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வேலனை, நெடுந்தீவு, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் இவ்வாறு வறட்சியை எதிர்கொண்டுள்ளன.
குறித்த பகுதிகளில் மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வவுனியாவிலும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகின்றது.
எனவே குடிநீர் பிச்சினை நிலவுகின்ற பிரதேசங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக நீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக