siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 மார்ச், 2019

பாலியாறு நீர்த்தேக்கம் ,50 கோடி ரூபாய் செலவில் வடமாகாண மக்களுக்கு

யாழ் . மாவட்டம் உள்ளிட்ட வடமாகாண மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமான முறையில் பாலியாறு நீர்த்தேக்கத்தை உருவாக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் , மீள்குடியேற்றம் , புனாழ்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது .
வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள் . இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக
ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீரை திசைத்திருப்பும் திட்டம் 
அமுலாக்கப்ப டவுள்ளது .
எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை , கீழ் பாலியாறு நீர்த் தேக்கத்தில் சேமித்து வைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது .இதன் மூலம் வவுனிக்குளம் , கொள்ளவிளான்குளம் , அடம்பன்குளம் , மல்லாவிக்குளம் போன்றவை சார்ந்த பிரதேசங்கள்
 அனுகூலம் பெறும் எனவும் இந்தத் திட்டத்திற்கான செலவினம் 350 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு
 மேலும் கூறியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக