siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 5 நவம்பர், 2022

இடம்பெற்ற கோர விபத்த்தில் வவுனியாவில் மூவர் பலி- 16 பேர் படுகாயம்

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது விபத்தில் சிக்கி பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த
 நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக