siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 ஜனவரி, 2023

மஹியங்கனையில் பிள்ளையினை காப்பாற்ற தன் உயிரினை மாய்த்த தாய்

இலங்கையில் மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின் சில பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.இதன்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் அயலவர் வீட்டிற்கு கணவன், மனைவி தப்பித்து செல்லும் வழியில் காட்டு யானை...

திங்கள், 30 ஜனவரி, 2023

கொழும்புக்கு யாழிலிருந்து எரிவாயுவினை வாகனத்தில் கொண்டு சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த கதி

யாழிலிருந்து கொழும்புக்கு தனது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது புதிதாக ஒரு எரிவாயு நிரப்பின நிலையில் சிலிண்டரினை வாகனத்தின் பின் பகுதியில் எடுத்து செல்லும் பொழுதுஇடை நடுவே எரிவாயு மனம் வாகனத்தில் வந்த பொழுது அதிர்ச்சியான குடும்பம் இடை நடுவே வாகனத்தினை நிறுத்து பார்த்த பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அருகில் உள்ள உணவுக்கடையில்கொடுத்து விட்டு கொழும்பு வந்ததாக முகநூலில் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளார்கள். தயவு செய்து உங்களது...

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில் பத்து மாதக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

 நாட்டில் 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.காலி கலேகான, நாகருக்காராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பெயிண்ட் அடிக்கும் தொழிலில்  ஈடுபடும் இவர்இ குடித்துவிட்டு வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

சனி, 28 ஜனவரி, 2023

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுமி தற்போது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட...

வெள்ளி, 27 ஜனவரி, 2023

அலையபத்து பகுதியில் தாயும், இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகிஉயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் அலையபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் - மஹாமன்கடவல, அலையபத்து பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.தாயும், இரண்டு...

வியாழன், 26 ஜனவரி, 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில்...

புதன், 25 ஜனவரி, 2023

தீ விபத்தில் சிக்கி தாய்லாந்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனில்...

அகாலமரணம் அமரர்கள் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் ரஜிதன் 21.01.23

பிறப்பு: 19-09-1970 ; இறப்பு: 28-01-2023யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தனபாலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் அன்புக் கணவரும்,ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா(கொழும்பு), ரேணுகா(மணி- பிரான்ஸ்)...

செவ்வாய், 24 ஜனவரி, 2023

பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த மகளை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார். இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர கோர்ட்டில்...

திங்கள், 23 ஜனவரி, 2023

முருகண்டி கோவிலில் மாமிச உணவு..உண்டதை கண்டுகொள்ளாத சில பக்த்தர்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி கோவிலுக்கு அருகிலே மாமிசம் சாப்பிடும் சகோதர இனத்தவர்கள்..!கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது முருகண்டியில் கும்பிட்டு செல்வது சாதாரண வழக்கமாக அனைத்து பிரயாணிகளும் இறங்கி கும்பிடுவது வழக்கம்.இரவு 10.30மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாக்கு வந்த சகோதர இனத்தவர்கள் பலர் சுற்றுலாவினை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுகின்ற வேளையில் இரவுச் சாப்பாட்டினை சாப்பிடுவதற்காக முறிகண்டி கோவிலுக்கு வருகைதந்து...

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

யாழ் வடமராட்சியில் விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில்  இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிளில்...

சனி, 21 ஜனவரி, 2023

சீனாவில் திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

னாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்துக்கு...

வெள்ளி, 20 ஜனவரி, 2023

திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள்...

நானுஓயா பிரதேசத்தில் பயங்கர விபத்து: ஏழு பேர் பலி! 41 மாணவர்கள் படுகாயம்

கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் நுவரெலியா நானுஓயா பகுதியில்.20-01-2023. இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பஸ் அதிவேகமாக பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.வேன் மீது பஸ் மோதியதில் இரு வாகனங்களும் 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.விபத்தில் 7 பேர்...

வியாழன், 19 ஜனவரி, 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இலங்கையில் அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>&...

இலங்கையில் வீடொன்றில் இருந்து இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு

இலங்கை கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்...

புதன், 18 ஜனவரி, 2023

கொழும்புபில் பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபர் விளக்கமறியலில்

கொழும்பு பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இது இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம்...

செவ்வாய், 17 ஜனவரி, 2023

யாழ் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கடலில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த கதி.

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம்  (11.01.2023) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில்...

திங்கள், 16 ஜனவரி, 2023

சீனாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோனா.. 60000 பேர் மரணம்.

சீனாவில் வேகமாக பரவி வரும் கோவிட் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 60000 நெருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும்கோவிட் பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது.கோவிட் பரவலைத் தடுக்க ஜீரோகோவிட் என்ற கொள்கையை சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.அதன்படி பல்வேறு...

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கணவன் இறந்த பின் மீண்டும் திருமணம் செய்யும் பெண்கள் படும் வேதனைகள்.

. ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்n ஆணிற்கொரு மறுமணம் என்றால் வயதில்லை,எந்தவொரு தடையில்லை இறந்த மனைவியின் நினைவில்லை..அவள் இல்லையென்ற வேதனை இல்லை.பெண்ணிற்கு மறுமணம் என்றால் மட்டும்,இறந்தவனின் நினைவு வந்துவிடும்.அவன் குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லையென்ற வருத்தம் வந்துவிடும்.மூன்று மாத வாழ்வில் மூளைச்சாவில் கணவன் போனால் மூலையில் அமரவைத்து,மூக்குசிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது.வாரிசு இல்லை.இறந்தவன் நினைவின்றி,உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று.பிள்ளையொன்று...

சனி, 14 ஜனவரி, 2023

காரைநகரில் வசிக்கிக்கும் .70 வயது முதியவரின் உழைப்பாளியின் கதை.

யாழில் ஓர் உழைப்பாளியின் கதை.. 70 வயது முதியவர் ஒருவர், யாழ்ப்பாணம் காரைநகரில் வசிக்கிறார். வயதாகிவிட்டதே, உடல் தளர்ந்துவிட்டதே என்றெல்லாம் நினைக்காமல், சுயதொழில் உற்பத்தியில் ஈடுபடுகிறார்.பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஓலை, ஈர்க்கு, நார், மட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, ஓலைப் பெட்டிகள், கடகங்கள், தட்டைப் பெட்டி, நீர்த்துப் பெட்டி, திருகணை போன்றவற்றை இவர் உருவாக்குகிறார். இதை ‘பன்ன வேலை’ என்று அழைப்போம்.மேலும் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு...

வெள்ளி, 13 ஜனவரி, 2023

யாழ் தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் அனைவரையும் பொங்கவைப்போம்”கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன்.12/01/2023 .அன்று  தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 12 ஜனவரி, 2023

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

நாட்டில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.கொரிய மொழிப் பரீட்சையில் 5 புள்ளிகளை இழந்து சித்தி...

புதன், 11 ஜனவரி, 2023

உடல்நலக் குறைவால் கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் பதவி வகித்த இரண்டாம் கான்ஸ்டன்டைன் மரணம்

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில்...