siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 23 ஜனவரி, 2023

முருகண்டி கோவிலில் மாமிச உணவு..உண்டதை கண்டுகொள்ளாத சில பக்த்தர்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி கோவிலுக்கு அருகிலே மாமிசம் சாப்பிடும் சகோதர இனத்தவர்கள்..!கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது முருகண்டியில் கும்பிட்டு செல்வது சாதாரண வழக்கமாக அனைத்து பிரயாணிகளும் இறங்கி கும்பிடுவது வழக்கம்.
இரவு 10.30மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாக்கு வந்த சகோதர இனத்தவர்கள் பலர் சுற்றுலாவினை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுகின்ற வேளையில் இரவுச் சாப்பாட்டினை சாப்பிடுவதற்காக முறிகண்டி 
கோவிலுக்கு வருகை
தந்து தங்கள் சமைத்து வைத்த உணவினை தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் எல்லோரும் சேர்ந்து சோறு இறால் கறிகளுடன் சாப்பாடினை பரிமாறி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவ் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மனதுக்குள் திட்டி தீர்த்த படியே அவ் இடத்தினை கடந்து 
சென்று விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அருகில் கடை வைத்திருப்பவர்கள் கூட அதனை தெரியப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அதில் வந்த இளைஞர்கள் அதனை தட்டி கேட்ட போது அவ் சகோதர இனத்தவர்கள் தங்களுக்கு இதில் மாமிசம்
சாப்பிடுவது பற்றி தெரியதென்றும் எங்களை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் தயவுடன் கேட்டு அவ்இடத்தில் சாப்பிட வந்த எல்லோரும் சேர்ந்து அவ் இடத்தினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அவ் இடத்தினை விட்டு உடனே விலகியுள்ளனர். ( தயவு செய்து முடிந்தவரை உங்கள் சகோதர இனத்தவர்களுக்கு
 இவ்வாறான எமது சைவ பழக்க வழக்கங்களினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக