siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 அக்டோபர், 2017

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களை காணவில்லை


முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் ஏழு பேர் குளப்பதற்காகச்
சென்றுள்ளனர்.
இதன்போது ஏழு பேரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய அலையொன்று வந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அலையில் சிக்காமல் ஐந்து பேர் தப்பித்துள்ள நிலையில் மற்றைய இரு இளைஞர்களும்
அலையில் இழுத்துச் சென்றுள்ளதாக தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து முல்லைத்தீவு பொலிஸார் மற்றும்
கடற்படையினரும் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக