siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 அக்டோபர், 2017

நினைவஞ்சலி 7ம் ஆண்டு அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்

மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — விண்ணில் : 18 ஒக்ரோபர் 2010
திதி : 30 ஒக்ரோபர் 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வைசி) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா! 
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!! 
தாங்கியே பிடிக்க தலைவனின்றி 
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில் 
உன் வண்ணவதனம் கண்டு 
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும் 
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!! 
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே! 
உன்னால் விளைந்த வித்துகள் 
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி 
விண்ணுலகு ஏன் தான் 
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும் 
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர் 
வாணுலகு போய் ஏழாண்டு வந்தும் 
வாடிவதங்கி வாட்டமுடன் 
வையமிங்கு வாழ்கின்றோம் 
ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு 
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி 
உன் கன்றுகளோடு கைகோர்த்து 
களி கொள்ள மாட்டாயா எங்கள்
 தலைவனே!
ஏழாம் ஆண்டில் நினைத்து நீர் மல்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தகவல்
கிருபானந்தன் சத்தியபாமா(மனைவி)
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக