siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 10 மார்ச், 2018

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் விபத்து; நால்வர் படுகாயம்

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நாலவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா எல பிரதேசத்தை சேர்ந்த டொல்பின் ரக வாகனமும் மெனிக்பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே மெனிக்பாம் கல்லாறு பாலத்திற்கு அருகில் நேருக்க நெர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து 
ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வானில் சென்ற இருவருமான நால்வர் படு காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ் விபத்து தொடர்பாக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக