siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 13 ஆகஸ்ட், 2022

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )13.08.2

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.
யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 
13-08-2022.சனிக்கிழமை  அன்று   அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின்  பாசமிகு மனைவியும்
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின்
 பாசமிகு தாயாரும்,ஆவார் அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 13,10,2022,சனிக்கிழமை  அன்று  பிற்பகல்,12,மணிஅளவில் சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்  ஆலய மண்டபத்தில் நடைபெறும்   அன்னாரின்   ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
31ம் நாள் அந்தியேட்டி கிரியை.13-08-2022..சனிக்கிழமை  அன்று 
>>>>> 
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
 நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
கணவர் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக