siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 17 ஆகஸ்ட், 2022

கோப்பாய் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு


யாழ் கோப்பாய் பகுதியை சேர்ந்த நபரொருவர் தனது நண்பனின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது 16-08-2022. அன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.
அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின்போது அவர் கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டடுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக