siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள்ளே குத்திக் கொல்லப்பட்ட நபர்

கொழும்புக்கு அருகில் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டை இன்று முற்பகல் விசாரித்துக்கொண்டிருந்த போது, இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டின் பிரதிவாதி ஒருவரும், மற்றுமொரு நபரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மற்றைய நபர் பிரதிவாதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சம்பவத்தில் 52 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 நடத்தி வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக