siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆறு பேருக்கு மரண தண்டனை உறுதி


 நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன 
உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய
 நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம்
 இன்று உறுதி செய்தது.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 
அடங்குவர்.
இந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி வாஸ் குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக