siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் புஹுல்வெல்லவில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்களில் மோதி: ஒருவர் பலி

நாட்டில் திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
நேற்று (18.08) பிற்பகல் ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது 
மோதியுள்ளது.
 இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஆகியோர் புஹுல்வெல்ல
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பிடத்தக்கது என்பதாகும் 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக