siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

விமானம் நிலை தடுமாறி பிரேசிலில் அறுபத்தி இரண்டு பேருடன் சென்ற விமானம் விபத்து

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று 
கொண்டிருந்தது. 
வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி  கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை 
உறுதிப்படுத்தி உள்ளது.
62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது.
அதில் பயணம் செய்த அனைவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
வியோ பாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது



0 கருத்துகள்:

கருத்துரையிடுக