siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு 
சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்றும் பல 
கோணங்களில் சந்தேகித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக