siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 23 செப்டம்பர், 2024

யாழ் அராலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர் படகில் சடலமாக மீட்பு

கடற்றொழிலுக்கு .22-09-2024.ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.23-09-2024. இன்று 
காலைவரை அவர் திரும்பி வரவில்லை
. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்டவர்கள், பொன்னாலை கடலில் அவரது 
சடலம் படகுடன் கரையொதுங்கி இருந்ததை 
அவதானித்தனர். சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறது.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக