siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

இலங்கையில் இருவேறு பகுதிகளில் யானை தாக்குதல் இருவர் பலி

இலங்கையில் கல்முனை மற்றும் கபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  
இவர்களில் ஒருவர் கல்முனை பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய புட்லா என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
 இதேவேளை, கபிதிகொல்லாவ, கன்வுட்டுவ மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். 
மஹரலபனாவ, கபிதிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக