siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 செப்டம்பர், 2024

திருமதி கயூரன் ஜனனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.09.24

தோற்றம் -28.04-1985- மறைவு- 06-10-2023
யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனி
அவர்களின் 1ம் ஆண்டு  நினைவஞ்சலி திதி .25.09.2024.புதன் கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெறும்  அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும் 
மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்  திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன்  அவர்களின் அன்புத்  தாயாரும் ஆவர் 
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமியே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள் நம்மை விட்டகன்று 
நல்ல குணவாலிக்கு  நாட்கள்
மாதங்களாய் அகவையும் ஒன்றாயிற்று 
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் அம்மா 
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும் ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான கணவர் மகன் குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக