siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குந்திக்குளம் பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார்
 தெரிவித்தனர்.
இச்சம்பவம் 07-09-2024 சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் குந்திக்குளம், மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியுமே 
உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் 
தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை (6) இரவு கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் 
ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை 
செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் 
வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மிஹிந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். என்பதாகும் 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக