siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் வேகமாக அதிகரிக்கலாம்

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.  எதிர்வரும் நாட்களில் வெள்ளம் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது. &nb...

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் கல்முனை கிட்டங்கி பாலத்தில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று மீட்பு

நாட்டில் கல்முனை கிட்டங்கி பாலத்தில் நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம்.29-11-2024. இன்று  மீட்கப்பட்டது.கல்முனை -பாண்டிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ஜெகன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சுரேஷ் என்பவரே இவ்வாறு கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நாவிதன்வெளி – சவளக்கடை மரம் அரியும் ஆலயம் ஒன்றில் வேலை பார்க்கும் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

வியாழன், 28 நவம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர்ஆறுமுகம் கனகசிங்கம் 28.11.24

 துயர் பகிர்வு-தோற்றம் 04-05-1940-மறைவு-28-11-2024.யாழ். யாழ் சிறுப்பிட்டி மேற்க்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள்  28.11.2024 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த...

மரண அறிவித்தல் அமரர் வேலுப்பிள்ளை கனகலிங்கம் 28.11.24

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-28-11-2024.யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் .28-11-2024.இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் பாசமிகுமகனும்  மகனும், துரைசிங்கம், இராசம்மா,காலஞ் சென்ற வனேஸ்வரி  மற்றும் குகதாசன், அவர்களின் சகோதரனும் ஸ்ரீ ரான்சன் அவர்களின் அன்பு மாமனாரும்  ஆவர்.அன்னாரின்...

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் சீரற்ற வானிலையால் நால்வர் பலி, ஆறு பேர் மாயம்

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த மோசமான காலநிலை காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 66,947 குடும்பங்களில் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார்.மேலும்...

அமரர் காசிநாதர் காசிநாதர் குலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் குலசிங்கம்  (செந்தா பஸ் உரிமையாளர்,)அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி 27-112024.புதன்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான  காசிநாதர் தம்பதிகளின் அன்பு மகனுமாவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த...

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் மட்டக்களப்பில் வெள்ளத்தால் வயலுக்குள் சிக்கியுள்ள ஏழு விவசாயிகள்

நாட்டில்  மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார.அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும்...

திங்கள், 25 நவம்பர், 2024

நாட்டில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொ லை

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஒருகொடவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த...

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் வவுனியா சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி விசாரணைகள் தீவிரப்படுத்திய பொலிஸார்

நாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தவறான முடிவெடித்து நபர் ஒருவர் 23-11-2024.அன்று  உயிரழந்துள்ளார். துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர்   சிறைக்கூடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் உணடியாக சிறைக்காவலர்களால் மீட்கப்பட்ட அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் முன்னமே சாவடைந்துள்ளதாக...

சனி, 23 நவம்பர், 2024

நாட்டில் வளர்ப்பு நாயை பிடிக்க ஓடிய இரண்டு வயது குழந்தை ரயிலில் மோதி உயிரிழப்பு

நாட்டில் வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடிய 2 வயது 2 மாத ஆண் குழந்தையொன்று கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக தாய் முன்னிலையில் உயிரிழந்துள்ளது.கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்ருவகந்த பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எம்.செஜன் ஹசரங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.இந்த வீட்டில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு புகையிரத பாதை...

வெள்ளி, 22 நவம்பர், 2024

மரண அறிவித்தல் திரு. குலதுங்கம் மதிசூடி(மதியண்ணா)

துயர் பகிர்வு தோற்றம் -01-01-1958-மறைவு-20-11-2024.யாழ் அரியாலையைபிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது கனடாவில் வசித்துவந்த  திரு குலதுங்கம் மதிசூடி(மதியண்ணா)அவர்கள் 20-11-2024.அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார் திருமதி நித்தி அவர்களின்  அன்புக்கணவரும் காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்துரை கமலம் தம்பதியினரின் அன்பு  மருமகனும் காலம் சென்ற அனந்தராஜா மற்றும் திருமதி ஜெயலக்சுமி (இலங்கை )அவர்களின் மருமகனும் திரு...

மகன் கத்தியால் குத்தியதில் கனடா ஸ்காபரோவில் தந்தை பலி மகன் கைது

கனடா - ஸ்காபரோவில் மகன் கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ் அரியாலையை சேர்ந்த 66 வயதுடைய குலதுங்கம் மதிசூடி என்பவரே உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து 32 வயதுடைய மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.என்பதாக...

வியாழன், 21 நவம்பர், 2024

நாட்டில் வன்னிவிளாங்குளம் பகுதியில் விபத்தில் இரு இளைஞர்கள் பலி-ஒருவர் படுகாயம்

நாட்டில் முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் 20-11-2024.அன்ரு  மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மல்லாவி பகுதியிலிருந்து மாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது வன்னிவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுசன்...

புதன், 20 நவம்பர், 2024

மன்னார் வைத்தியசாலையில் பத்து வருடங்களுக்குப் பின் பிரசவம்: தாயும் சேயும் மரணம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு, .20-11-2024 புதன்கிழமை . காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார். மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்களாக பிள்ளை இல்லாத நிலையில்.19-11-2024. செவ்வாய்க்கிழமை...

செவ்வாய், 19 நவம்பர், 2024

சுவிற்சர்லாந்தில் வாகன விபத்தில் அகலமரணம் திரு. திருலோகபாலகன் கேசவன்

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-19-11--2024.யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும்சுவிசை வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்திருலோகபாலகன் (தமிழ் காவலர்) அவர்களின் மகன் கேசவன் அவர்கள் .19-11-2024.அன்று சுவிற்சர்லாந்தில் அகலமரணம் சுவிற்சர்லாந்து Valais மாகாணத்தில் உள்ள Leuk என்ற இடத்தில் 27 வயது சாரதி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். திருலோகபாலகன் பாப்பன்  தம்பதிகளின் அன்பு மகனுமாவார் சஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில்...

திங்கள், 18 நவம்பர், 2024

நாட்டில் குழந்தைகளுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீட்டித்தால் வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தல்

குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவது வைரஸ் தொற்று மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் பொதுவாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக விளக்கினார்.  குறிப்பாக மூன்று...

ஞாயிறு, 17 நவம்பர், 2024

யாழில் ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது

மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் 16-11-2024.அன்று கைது செய்யப்பட்டனர்.தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடொன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் 15-11-2024. வெள்ளிக்கிழமை அன்றுவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், மூளாய் தண்ணீர் தொட்டியடி பகுதியைச் சேர்ந்த...

சனி, 16 நவம்பர், 2024

நாட்டில் கள்ளிக்குளம் பகுதியில்கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்

கள்ளிக்குளம் பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த அனர்த்தம் 16-11-2924.அன்று  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சிறுவன் 16-11-2924.அன்று  காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு...

வெள்ளி, 15 நவம்பர், 2024

நாட்டில் பொல்அத்து மோதர பிரதேசத்தில் லொறி ரயிலுடன் மோதி விபத்து;ஏழு பேர் படுகாயம்

நாட்டில் வெலிகம - பொல்அத்து மோதர பிரதேசத்தில் சிறிய ரக லொறி, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், லொறியில் பயணித்த இரு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்...

வியாழன், 14 நவம்பர், 2024

நாட்டில் வில்கமுவ பிரதேசத்தில் பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு முப்பத்தி ஒன்பது பேர் காயம்

நாட்டில் மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை எலவகந்த பிரதேசத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எதிர்திசையில் பயணித்த வேன் மீது மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளது.இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த 37 பேரும் (37) வேனில் பயணித்த 5 பேரும் (05) காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள்...

புதன், 13 நவம்பர், 2024

நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை (13) முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு...

செவ்வாய், 12 நவம்பர், 2024

மைதானம் ஒன்றுக்குள் சீனாவில் நுழைந்த கார் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழப்பு

சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக சென்றதால் அங்கிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரை...

திங்கள், 11 நவம்பர், 2024

நாட்டில் சுன்னாக சம்பவ த்தில் குற்றமிழைத்த பொலிஸார் பணியிடை நீக்கம்

யாழ் - சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் அராஜக நடவடிக்கையால் குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றமிழைத்த  பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒருவர்...