siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2026

குழந்தை கருவில் இழந்த துயரத்திலும் களமிறங்கிய காக்போ: கோலுக்குப் பின் கண்ணீர்

காக்போ: தனது குழந்தை 3 நாட்களுக்கு முன்னர் கருவிலே உயிரிழந்தநிலையில், நெதர்லாந்து வீரர் கோல் அடித்ததும் மைதானத்திலே கதறி அழுதுள்ளார். 2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் மொரோக்கோவிற்கு இடையேயான போட்டியில், முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. 
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ(cody gakpo) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 
ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தினை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. 
நெதர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த 
போட்டியில், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 
கோல் அடித்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த சனிக்கிழமை கோடி காக்போவின் துணைவி நோவா வான் டெர் பிஜ்(Noa van der Bij), தங்களது குழந்தை கருவிலே
 உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார். இந்த சோகமான சூழலில் கோடி காக்போ அவருடயை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அணி நிர்வாகம் விடுப்பு வழங்கியது. ஆனால், இது தனது தேசிய அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் கோடி காக்போ ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
கோடி காக்போ கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், வீரர்கள் சுற்றி நின்று அவருக்கு ஆதரவு வழங்கினர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து பேசிய நெதர்லாந்து 
கோமன், "எங்களால் இயன்றவரை அவருக்கு ஆதரவளித்து வருகிறோம். 
நிச்சயமாக, முதல் சில நாட்களுக்கு அவர் தனது 
குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடன் இருப்பதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் 'நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்' என்று அவர் ஒரு கணம் கூட கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக