siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 27 ஜூன், 2026

வெப்ப அலை காரணமாக பிரான்சில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

வெப்ப அலை காரணமாக பிரான்சில்  உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள்
 தெரிவித்தனர். 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக