siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜனவரி, 2015

குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த இளம்பெண்!!

தகாத உறவால் பிறந்த குழந்தையை 6–வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த குழந்தை 
மும்பை வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் அட்லாண்டா என்ற 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே உள்ள நீச்சல் குளத்தின் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த கட்டிடத்தின் அருகே உள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 4 நாட்களாக எந்தவொரு பெண்ணிற்கும் பிரசவம் ஆகவில்லை எனதெரியவந்தது.
தகாத உறவு 
இதையடுத்து அட்லாண்டா கட்டிடத்தில் குடியிருப்பவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடத்தின் 6–வது மாடியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த இளம்பெண் ஆடையில் ரத்தக்கரையுடன் சோர்வடைந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் வீட்டின் பாதுகாப்புக்காக அந்த இளம்பெண் கடந்த 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.
குழந்தை கொலை 
திருமணமாகாத அந்த இளம்பெண் தகாத உறவால் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் 6–வது மாடியில் உள்ள கழிவறை ஜன்னலில் இருந்து தூக்கி வெளியே வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 19 நவம்பர், 2014

நவக்கிரி புத்தூர் கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலம் மீட்பு

யாழ். நவக்கிரிபுத்தூர்ரயை சேர்ந்த பெண்ணொருவர் 17.11.14. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்திருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் கொள்ளை!

குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற கார் ஒன்றில் நேற்று  மாலை 3.45 அளவில் வருகை தந்த சிலரே ஆலயத்தில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாவத்தகம  பரந்தன வீதியிலுள்ள அம்மன் கோவிலிலே பெறுமதியான தங்க நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் கொள்ளையிடப்பட்டுள்ள பணம் மற்றும் தங்க நகைகளின் மொத்த பெருமதி இதுவரை கணிப்பிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

, பொலிஸ் நிலையம் முன்பு திரண்ட மக்கள் !

கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ்
உத்தியோகஸ்தர் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
நேற்று மாலை கல்முனை சிறீ முருகன் கோயிலில் பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதனை அறிந்த பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இருவரையும் நேரடியாக பிடித்துள்ளனர். அதன்பின்னர்
பொதுமக்களிடம் தாங்கள் இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த  பொலிஸார்  அங்கு நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்காமல் ஆலய பிரதம குருவையும்
 இரண்டு இளைஞர்களையும் வலாத்காரமாக பிடித்து பொலிஸ் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்
 இந்த சம்பவத்தால் கல்முனை மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு  சம்மந்தப்பட்டவர்களை  கைது செய்யும்படியும்  அப்பாவிகளை விடுமாறு கோசம் எழுப்பினர்அப்பகுதியில் கட்டுக்கோப்பிற்கு  கொண்டுவரும் பொருட்டு கைது செய்தவர்களை விடுவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ள போலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 5 ஏப்ரல், 2014

அமரர் திரு நடராசா அற்புதராசா


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

        தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசாஅவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.0.....திங்கட்கிழமை


விழிநீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா.

நன்றி நவிவிலல்

 மலர்வு.17 ஒக்ரோபர் 1957.,,உதிர்வு.08 மார்ச் 2014.
                                        
    அமரர் திரு நடராசா அற்புதராசா.
 தோற்றமும்.மறைவும் இயற்கை வகுத்த நியதி என்றாலும்
இன்பமும்துன்பமும் வாவின்மேடயில் அரங்கேறும்நாடகமானாலும்பார்த்த்துப்பழகியகண்களும்பேசிப்பழகியவாயும்
கேட்டு மகிழ்ந்தகாதுகளும்நினவுகள்பதித்தநென்சமும்அய்யகோ
அன்னாரின் பிரிவுத்துயரால் தவிக்கிறதே குடும்பம்!
 காலமே விரைந்துவந்து இவர்களுக்குஅறுதல்தராயோ!!
ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!அன்னாரின்பிரிவால் துயரும்!!அன்பு மனைவி பிள்ளைகள்அன்பு உறவுகள்!!!
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
 

செவ்வாய், 25 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சாருகா (25 -03 -2014)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 12வது
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (25 -03 -2014)  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch
நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.


புதன், 19 மார்ச், 2014

குறை நிறைகளை தெரிவிக்க அபிப்பிராய பெட்டிகள்

 
வவுனியா வைத்தியசாலையில் உள்ள குறை நிறைகளை நோயாளர்கள் அறிவிப்பதற்காக அபிப்பிராய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வைத்தியசாலையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு நோயாளர்களின் கருத்தக்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது.
எமது வைத்தியசாலையில் நோயாளர்களின் அபிப்பிராயங்களை கேட்பதனூடாக எமது வைத்தியசேவையை இன்னுமோர் தரத்திற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என கருதப்பட்டதன் காரணமாக நாம் வைத்தியசாலையில் 12 அபிப்பிராய பெட்டிகளை பொருத்தியுள்ளோம்.
இவ்வாறான பெட்டிகள் சிகிச்சை நிலையங்கள் மற்றும் விடுத்திகள் வைத்தியசாலையின் வாயில் பகுதி என்பன வற்றில் பொருத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மற்றுமு; நோயாளர்கள் தாம் வைத்தியசாலையில் எதிர்நொக்கும் பிரச்சனைகள் மற்றும் தமக்கு திருப்திகரமான சேவை என்பனவற்றின் கருத்துக்களை இப் பெட்டியினுள் இடமுடியும்.
அத்துடன் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் சேவையை வழங்க மறுப்பவர்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்க முடியும். அத்துடன் வதை;தியசாலையின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் இப் பெட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக எனக்கு முன்னால் திறக்கப்பட்டு என்னால் பரிசீலிக்கப்படும் என்பதனால் உடனடி தீர்வுகளையும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.


புதன், 12 பிப்ரவரி, 2014

நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு !

 ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார்.
அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனைதொடர்ந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ, ரெனோயர், மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோர்னிலியசின் தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு திருடப்பட்டதாய் இருந்தால் உரியவர்களிடம் கலைப்பொருட்கள் திருப்பி கொடுக்கப்படும் என ஜேர்மனி அரசு குறிப்பிட்டுள்ளது.
                           

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

100 அடி உயரம் வரை பறக்கும் காணொளி


சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது   தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பாம்புகள் காற்றில் மிதக்கும் ஆற்றலைப் பெறுகின்றன என இக்குழுவினர் கூறுகின்றனர்.

வியாழன், 26 டிசம்பர், 2013

ஆயிரம் மக்கள் பலியெடுக்கப்பட்ட மெரீனா!!!

கடற்கரையில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழகத்தில் கடலோர கிராமங்களில் பெருவாரியாக வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25–ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய களைப்பில் 26–ம் திகதி அதிகாலையில் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

அப்போது கடலில் உருவான சுனாமி பேரலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்தது.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மக்களை அப்படியே வாரி சுருட்டி கடலுக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி தொடங்கி குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் என பல மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களிலேயே மாண்டு போனார்கள்.



10 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது சுனாமி. இயற்கையின் சீற்றம் ஏற்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்


மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு - உருக்கு தொழிற்சாலையொன்றும் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:


 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர் துறக்கின்றனர்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மைகளை மாணவர்கள்

நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், கொழும்புக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்களை அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவனத்திற்கும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர்.

வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இருந்தும் புற்று நோயாளர்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது என்றார்.

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !


 
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி, தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
   
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ், பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் என்எஸ்ஏ, இணையதள சேவைகள் மூலம்

அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு

 லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க உளவுப் பிரிவுகளின்

செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை

என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40,000க்கும் அதிகமான இ-மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி


மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்..
போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.

தமது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி பிரார்;த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த மாணவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மற்றுமோர் மோதலில் தப்பி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி 27வயதான பி. செல்வக்குமார்

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்

வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும் போது வருகை தந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதேயிடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்


மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த 20 பிரதேங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலைவன பிரதேசமான வடக்கு மாலியில் சரியான சாலை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி ஹெர்ப் உறுதி செய்தார்.
அல்கொய்தா மற்றும் முல்லா ஓமர் தலைமையிலான தலிபான் இயக்கங்களுடன் லத்தீப் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்


 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் வெப்பநிலை ஆறு டிகிரி C முதல் 14 டிகிரி C  வரை காணப்படும் என்றும், முனிச்சில் 8 டிகிரி C-க்கு மேல் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !


 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க


ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.
போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது.
அதனால் உலர் திராட்சை, பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் உலர் திராட்சையில் 449 கலோரிகளும், ஒரு கப் பாதாமில் 529 கலோரிகளும் அடங்கியுள்ளது.
அவைகளை ஐஸ்க்ரீம் அல்லது தயிரின் மேல் தூவி விட்டு உண்ணலாம். வேண்டுமானால், சாலட் மற்றும் உணவு தானியங்களிலும் கலந்து உண்ணலாம்.
சீஸ்
மற்ற அனைத்து பால் பொருட்களை போல சீஸிலும் (பாலாடை கட்டி) அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால், வேகமாக உடல் எடை கூட விரும்புபவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
கலோரிகள் மட்டுமின்றி, இதில் புரதம், கால்சியம், மற்றும் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
அதனால் உணவுகளில் கொஞ்சம் சீஸை தூவி விட்டால் போதும், உணவின் சுவை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு முறை பரிமாறப்படும் சீஸில் 69 கலோரிகள் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரதமும், கொழுப்பும் அதிகளவில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் தோராயமாக 100 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்

அடங்கியுள்ளது. இதில் உள்ள கொழுப்பு தெவிட்டாத வகையை சேர்ந்ததாகும்.
அதனால் இது இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை வெண்ணெயை முழுதானிய ரொட்டியில் தேய்த்து உண்ணுங்கள் அல்லது ஆப்பிள் உண்ணும் போது இதனை தொட்டுக் கொள்ளுங்கள்.
கொழுப்பு நீக்காத முழுமையான பால்
கொழுப்பு நீக்காத முழுமையான பாலை ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் கலந்து உண்ணலாம்.

வேண்டுமென்றால் ஒரு டம்ளர் பாலையும் அப்படியே குடிக்கலாம். வேண்டுமென்றால் அதனுடன் கொஞ்சம் சாக்லெட் பொடியையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
கலோரிகள் அதிகமுள்ள இதில் வைட்டமின் டி மற்றும் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதில், கொழுப்பு நீக்காத பாலையே தேர்ந்தெடுங்கள்.

இது தான் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கொழுப்பு நீக்காத ஒரு டம்ளர் பாலில் 120-150 கலோரிகள் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தவிர்க்கும் ஒரு காய் தான் உருளைக்கிழங்கு.
ஆனால் ஏன் அதை விட்டு ஓடி போகிறீர்கள்? அதற்கு காரணம் அ
தில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட். இது வேகமாக உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதே போல் இதில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. உருளைக்கிழங்கின் தோளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், தோலோடு சேர்த்தே உண்ணுங்கள்.
மேலும் அதனை மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்ணலாம். ஒரு இடைநிலை உருளைக்கிழங்கில் 150 கலோரிகள் அடங்கியிருக்கும்.
பாஸ்தா

கலோரிகள் நிறைந்த சுவைமிக்க உணவு தான் பாஸ்தா. மேலும் இதில் கார்போஹைட்ரேட் கூட அதிக அளவில் உள்ளது.
பல காய்கறிகளை இதனுடன் சேர்த்தால் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் சேர்ந்துவிடும். ஒரு கப் மக்ரோனியில் 300 கலோரிகள் உள்ளது. இதுவே சமைத்த உணவில் 22 கலோரிகள் இருக்கும்.
வெண்ணெய்

தெகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது

வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
ஆரோக்கியமான இனிப்பு பழங்கள்
மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இவைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அவைகள் உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு சரியான தேர்வாக விளங்குவது தான் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த இந்த பழத்தில் 300 கலோரிகள் அடங்கியுள்ளது.

அதனால் இவை இனிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். இதனை பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், டெசர்ட் மற்றும் ஜூஸ்களில் கலந்து உண்ணலாம்.
முட்டைகள்

கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது தான் முட்டை. ஒரு முட்டையில் தோராயமாக 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளது.
அதனால் தான் உடலை வளர்க்கும் ஆண் மகன்கள் முட்டையை விரும்பி உண்ணுகிறார்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமில்லாத கொலஸ்ட்ரால் உள்ளதால் அதனை தவிர்த்திடுங்கள்.

ஆனால் இந்த முட்டையை முட்டை பொறியல், அவித்த முட்டை அல்லது ஆஃப்-பாயில் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பில்லா இறைச்சி

கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உடலை பெற இதனை ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள். இவைகளில் புரதமும் அதிகமாக உள்ளதால், தசைகள் வளர்ச்சியடைய உதவும்.

அதிலும் அதனை வறுத்து அல்லது வேறு விதமாக சமைத்தும் உண்ணலாம். இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும்.