siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 ஜூன், 2016

ஜேர்மன் குடியுரிமையை எப்படி பெறுலாம்?

ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி என்பதற்கான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜேர்மன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமையை பெறுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு துறை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் குடியுரிமையை பெறுவதாக இருந்தால் தற்போதையை குடியுரிமையை இழக்கவும் நேரிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது
ஆனால், ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி என்பதற்கான தகவல்களை பார்ப்போம்.
நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி?
நிரந்தர குடியிருப்பு அனுமதி என்பது ஜேர்மன் குடியுரிமை பெறாமல் அந்நாட்டிலேயே நிரந்தரமாக அல்லது நீண்ட வருடங்களாக குடியிருக்கும் உரிமையாகும்.
இந்த அனுமதியை பெறுவதற்கு ஒரு நபர் குறைந்தது 5 வருடங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்க வேண்டும்.
ஒரு ஜேர்மன் குடிமகனுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமைகளும் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் பலப்படுத்திக்கொண்டு. சுகாதார காப்பீடு பெற்றுருப்பதுடன் எவ்வித குற்ற வரலாறுகளும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக EC Residence எனப்படும் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் வரையறுக்கப்பட்ட குடியிருப்பு அனுமதியும்(Limited residence permit) கிடைக்கும்.
அதாவது, பணி செய்ய அனுமதிக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த அனுமதி கிடைத்தால், இதனை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்.
அதே சமயம், குடியமர்வு அனுமதியும்(settlement permit) பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதனை பயன்படுத்தி அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்க முடியாது.
இந்த அனுமதியை 5 வருடங்களுக்கு குறைவாக வசித்திருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவன் 2 வருடங்கள் தங்கியிருந்தாலும் கூட, அவர் குடியமர்வு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல், EU Blue Card பெற்றுள்ளவர்கள் (அதாவது 49,600 யூரோ அல்லது 38,688 யூரோக்கு மேல் மொத்த வருவாய் பெறுபவர்கள்) 33 மாதங்கள் அல்லது 21 மாதங்கள் வசித்திருந்தாலும் அவர்களிடம் B1 மொழி அங்கீகாரம் இருந்தால் அவர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் 
செய்யலாம்.
மேலும், வெற்றிகரமாக சுயதொழில் செய்து வரும் நபர்கள் 3 வருடங்களில் கூட நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதுமட்டுமில்லாமல், பெரும் தகுதிப்படைத்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் ஜேர்மனியில் தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜேர்மன் குடியுரிமையை பெறுவது எப்படி?
ஜேர்மனில் limited residence permit-ன் கீழ் குடியுரிமையை பெற வேண்டும் என்றால், அவர் அந்நாட்டில் குறைந்தது 8 வருடங்கள் வசித்திருக்க வேண்டும்.

எனினும், அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள ஜேர்மன் மொழி கற்பிக்கும் வகுப்புகளில் பங்கேற்று இருந்தால், 7 வருடங்களில் கூட குடியுரிமையை பெற்று விடலாம்.
இவை அனைத்தையும் விட முக்கியமானதாக, ஜேர்மன் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஜேர்மன் மொழியில் பேசுவது மட்டுமில்லாமல், அம்மொழியில் எழுதவும், அதிகாரிகள் அளிக்கும் பயிற்சியினை ஜேர்மன் மொழியில் செய்து முடிக்கவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிக அவசியமான 
தகுதியாகும்.
அதே போல், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர் அவருடைய தாய்நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். ஒரு வேளை அவரது தாய்நாடு இதை அனுமதிக்காவிட்டால், அவருக்கு சில விதிவிலக்கு 
அளிக்கப்படும்.
மேலும், அரசு நிதியுதவியை எதிர்ப்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று தனது செலவுகளை பார்த்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியது போல், எவ்வித குற்றப்பின்னணியும்
 இருக்க கூடாது.
இறுதியாக, ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு B1 வரிசையில் ஜேர்மன் மொழியில் 33 கேள்விகள் கேட்கப்படும்.
ஜேர்மன் நாட்டின் வரலாறு, சட்டங்கள், குடிமக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கேள்விகள் அமைந்திருக்கும்.இந்த 33 கேள்விகளில் குறைந்தது 17 கேள்விகளுக்கு சரியாக பதில் 
அளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கூறிய அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால், உங்களுக்கு ஜேர்மன் குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



புதன், 22 ஜூன், 2016

நீராடச் சென்ற இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!!

ஊவாபரணகம பிரதேசத்தில் 8 பேருடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் தன்சல் நிகழ்வுக்கு சென்று விட்டு நண்பர்கள் 8 பேர் நீராடச் சென்ற போது 21 வயது இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிமடை வெலிமடைகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊவபரணகம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 9 ஜூன், 2016

வருகிறது மருத்துவமனை பேஸ்புக் அடிமைகளை மீட்க?

இதோ பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து 
 வருவதாகக்கூறப்படுகிறது.
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.
இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 6 ஜூன், 2016

பஸ் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு அன்பளிப்பு!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்று அன்பளிப்பாக பாடசாலை மாணவர்களிடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

புதுக்குளம் சித்திவிநாயகரின் 16 வது மாபெரும் விளையாட்டு விழா ஆரம்பம்

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் 16 வது மாபெரும் விளையாட்டு விழா இன்று உற்சாகத்துடன் ஆரம்பமானது.
இந்த விழா கழகத்தின் தலைவர் திரு.பார்த்தீபன் தலைமையில் 04.06.2016 காலை 8.00 மணிக்கு கழக மைதானத்திலிருந்து கிளிநொச்சி பரந்தன் சந்தி வரையான இருவழி தூர (115 கிலோமீற்றர்) சைக்கிளோட்ட போட்டியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏனைய போட்டிகள் கழக மைதானத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாலை பரிசளிப்பு விழா இடம்பெற்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 31 மே, 2016

மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிநடைபெரு கின்றது?

முரசுமோட்டையில் மாட்டுவண்டி சவாரி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
கிளிநொச்சிநெற் இணையத்தின் ஊடக அனுசரணையுடன்
 முரசொலி 
விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி தற்போது முரசொலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

பூமியையொத்த கிரகங்களின் கண்டுபிடிப்பும் எரிகல் வீழ்ந்து பூமி அழியும் சாத்தியமும்!

இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார்.
“இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கமளித்துள்ளார்.
மேலும் இயற்கை மனிதர்களுக்கு அல்லது பூமிக்கு ஏற்படுத்தும் அழிவுகள் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் குறிப்பிடலாம். இது பற்றியும் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெளிவுபடுத்தியுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள்     



புதன், 25 மே, 2016

கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது.
இது காலி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி செய்த சிறு தவறுக்கு இவ்வாறு தண்டனை வழங்க கூறிய அந்த ஆசிரியர், பயிற்சிக்காக வந்த அறிவியல் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் மாகாண கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இது தொடர்பாக வேறு ஒரு விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

முடி உதிர்வை இரண்டு வாரத்தில் தடுக்கஓர் தகவல்

இரண்டு வாரத்தில் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர இலகுவான வழி! காணோளியை பாருங்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 18 மே, 2016

எச்சரிக்கை கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள்-

கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள் பலர் தங்களது கைவண்ணத்தினை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாகரிகமான முறையில் ஆடை அணிந்து தமது பேச்சுத்திறமை மூலம் மக்களை ஏமாற்றி வருவது 
அவதானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் தான் தன் பணப்பை தொலைந்தது.  இதனால் வீடு செல்ல சிறிதளவு பணம் தேவைப்படுகின்றது எனக்கூறி பேருந்து தரிப்பிடங்களில் மக்களை ஏமாற்றி பணம் பெற்று
 வருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது இடங்களிலும் இந்த நாகரிக திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 10 மே, 2016

தாயகம் திரும்பியவர் கட்டுநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.!!!

வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இந்த மாதத்தில் கைதுசெய்யப்படும் இரண்டாவது தமிழர் இவர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 இவர் கடந்த 2013ஆம் ஆண்டு
 தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு
 சென்ற அவர்
 இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எ.டொமினிக் பிறேமானந் தெரிவித்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு 
செய்துள்ளதாகவும் சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார்.இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், மன்னார் – அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கடந்த 
10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை கொழும்பு 4 ஆம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> />

சனி, 7 மே, 2016

யாழில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் பலி!!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்தவேளை, தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.
இதனையடுத்து, இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!!

இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,
சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.
இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் – வரி திருத்தத்தால்!

மே மாதம் 2ம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூற முடியாது என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதார நிலைமையும் இதனை பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 6 ஏப்ரல், 2016

சாரதிகளே கவனம் !மது அருந்தி வாகனம் செலுத்தினால் கைது

சித்திரை புதுவருடத்தின்  போது வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக பொலிஸ்  விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ்
  தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ,பொலிஸ்  சீருடையிலும் , சிவில் உடையிலும் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபடுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 30 மார்ச், 2016

டெலிபோனுக்கு வாட்ஸ் அப்பில் இருந்து பேசும் வசதி?

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை 
கண் இமைக்கும் 
நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது வாட்ஸ் அப். உலக அளவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  நூறு கோடியாக 
உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் 
அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 25 மார்ச், 2016

மீண்டும் தீவிரமடைகின்றது டெங்கு நோய்

இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2014இல் 47 ஆயிரம் நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் 96 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்தில் 29,770 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை
 ஒரு பில்லியன்
 ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இவ்வருடத்தில் இந்த நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 29 தொடக்கம் ஏப்ரல் 4 வரை டெங்கு குடம்பிகளை அழிப்பதற்கான தேசிய மட்டத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார சேவை அமைச்சு அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் போன்றவை பங்கேற்கும் என்று
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 22 மார்ச், 2016

திருடர்களை வெடி கொழுத்தி துரத்திய மக்கள்!

 நீர்வேலியில்   திருடர்கள் தொல்லை! வெடி கொழுத்தி துரத்திய மக்கள்
நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
நேற்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும் விழிப்படையச் செய்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் கேட்ட பட்டாசு சத்தத்தினால் மக்கள் விழிப்படைந்து பீதியடைந்தனர்.
திருடர்களின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் பதற்றத்துடனும், பீதியுடனும் இரவுப் பொழுதைக் கழிப்பதால் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்தும் பட்டாசுகளை வெடிக்க வைக்கும் புதிய வியூகத்தை மக்கள் கையாள்வதினால் ஏனைய மக்கள் உசாரடைந்தும் 
வருகின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவும் நீர்வேலி வில்லுமதவடியில் வீடு ஒன்றில் திருடுவதற்கு திருட்டுக் கும்பலொன்று முயற்சித்த போது அவர்களின் சத்தத்தினால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட திருடர்கள் ஓடிச்சென்றுள்ளனர்.
மேலும் இப்பிரதேசங்களின் மக்களின் இரவு பாதுகாப்பிற்காக விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால் இதுவரை கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 மார்ச், 2016

தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான் அதிர்ச்சி சம்­பவம்?

                      விரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­காரர். இதனை வாங்கி சாப்­பிட்­டவர் அதிர்ச்­சியில் மயங்­கியே 
விழுந்­து­விட்டார்.
விரு­து­ந­கரில் துப்­பு­ரவுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ‌பணி­யா­ளர்கள் சில‌ர், அங்­குள்ள ஒரு கடை­யில் சாப்­பிட்டுள்­ளனர். அப்­போது‌ ஓணா­னுடன் இருந்த சமோ­சாவை ‌சாப்­பிட்ட பணி­யாளர் ஜெயக்­கனி என்­பவர் மயங்கி விழுந்தார். இது­கு‌‌­றித்து நக‌­ராட்சி சுகா­தார ஆய்­வா­ள‌­ருக்கு தகவல்
 தெரி­விக்­கப்­பட்­டதை‌
 அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­களை பறி­முதல் செய்து அழித்­துள்­ளார். மேலும், அரு­கி­லி­ருந்த கடை­களில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­க­ளையும் கைப்­பற்றி அழித்­துள்­ளார். சமோ­சாவில் ஓணான் இருந்த சம்­பவம் அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியுள்­ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 மார்ச், 2016

வைத்தியசாலை மாடியிலிருந்து பாய்ந்து, நபரொருவர் தற்கொலை!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நபரொருவர் 12 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் தலவத்துகொட, மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>