siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 2 நவம்பர், 2019

இலங்கையில் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு இரு சிறுவர்கள் பலி

தென்னிலங்கையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் வாகனத்தில் மோதுண்டு 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.வீரக்கெட்டிய, தங்காலை வீதியில் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது
.சிறுவர்கள் இருவரும் அவர்களது தாயாரும் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி வீதியில் செல்லும் போது, பேருந்திற்கு பின்னால் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டமையதால் இந்த 
விபத்து நேர்ந்துள்ளது
.விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் பிள்ளைகள் வீரக்கெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மற்றுறொரு பிள்ளையையும், 
தாயையும் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.விபத்தில் 12 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படும் 15 வயதான சிறுவனும் அதில் பயணித்த இருவரும்
 கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக