siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 8 நவம்பர், 2019

இலுப்பையடிப் பகுதியில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி

 வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், 
திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிப்பரின் சாரதி தப்பியோட முற்பட்டபோது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸில் 
ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக