siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 நவம்பர், 2019

யாழ் சுன்னாகத்தில் தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்பு

பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் கடந்த 29.10.2019.ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், யாழ். குப்பிளான் வடக்கு
யாழ்  சுன்னாகம் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி தனபதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இறந்த தாயின் மகள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் அவர் தாயுடன் கதைப்பதில்லை எனவும், எந்த விதமான பண உதவியும் செய்வதில்லை எனவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், அயலவர்களிடம் உணவு வாங்கி உட்கொண்டே தாய் வசித்து வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 29ஆம் திகதி அயல்வீட்டு உறவினர் ஒருவர் உணவு வழங்குவதற்காக 
சென்றுள்ளார்.இதன்போதே அந்த தாய் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக