siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 17 ஏப்ரல், 2021

முள்ளியில் படையினரின் உத்தரவை மீறி தப்பிச்சென்ற பிக்-அப் ரக வாகனம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்து, தப்பிச் சென்ற ;பிக்-அப் வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளையடுத்து துன்னாலை பிரதேசத்தில் குறித்த ;பிக்-அப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது நெல்லியடி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதனை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை  முள்ளி 
பகுதியில், கட்டளையை மீறி பயணித்த மேற்படி பிக்-அப் ;வாகனம் மீது, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்று(16)  காலை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
 எவ்வாறிருப்பினும், அந்த ;பிக்-அப் ரக வாகனம் தொடர்ந்தும் நிறுத்தாமல் பயணித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த வாகனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
 மேலும் மேற்படி கெப்பில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக