தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
திதி : நாள்.26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நடராஜா அற்புதராஜா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி .திதி
அமரர் நடராஜா அற்புதராஜா அவர்களின் நீங்காத நினைவுடன் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி
26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
ஒன்பதாவது ஆண்டு நினைவலை!
ஒன்பது ஆண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
எம் இதயம் உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை சூரியனே!
நீங்கள் இன்றி எங்களுக்கு ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்... உங்களை
இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் ,
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக