சாலை விபத்தில் கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிச்சனர் நகருக்கு வடக்கே உள்ள கோனெஸ்டோகோ ஏரிக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு எஸ்.யூ.வி ரக காரும், ஒரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வேனில் 10 பேரும், எஸ்.யூ.வி காரில் ஒருவரும் இருந்துள்ளனர். வேனில் இருந்தவர்களில் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக