siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 12 ஜூன், 2026

ஏற்பட்ட கார் விபத்தில் கனடாவில் இளைஞர் உட்பட இருவர் மரணம்

. கனடாவின் கியூபெக் மாகாணத்தில், போலீஸார் துரத்திச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். அந்த காரின் உரிமையாளர் நன்னடத்தை
 உத்தரவை
 மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் போலீஸார் அந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை ஓட்டிச் சென்றவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக காரைச்
 செலுத்தியுள்ளார். 
பொலிஸார் காரைத் துரத்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மாண்ட்ரியல் நகருக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லாக் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த டெலிஸ்லே ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 
ஆற்றில் மூழ்கிய
 காரில் இருந்து கடுமையான காயங்களுடன் இருவரை மீட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காவல்துறை தகவலின்படி, காரை ஓட்டியவர் 18 வயது இளைஞர் என்றும், அவருடன் பயணித்த மற்றொரு நபரின் வயது மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக