கொழும்பு- ப்ளூமெண்டல் காவல் நிலையத்தில், சார்ஜன்ட் ஒருவரின் வசம் இருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக இயங்கியதில், பொலிசார் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ப்ளூமெண்டல் பொலிஸார் தெரிவித்தனர். உதவிச் சேவைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
.தமது கடமைக்கான துப்பாக்கியைப் பொறுப்பேற்று அதனைப் பரிசோதிக்கும்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி இயங்கியுள்ளது. இதன்போது அதிலிருந்து ஒரு ரவை வெளியேறி, தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் (Tiles) மீது பட்டு, அதன் சிதறல் துண்டு
உதவிச் சேவையில் ஈடுபட்டிருந்த காவலரின் இடது கால் கணுக்காலுக்கு சற்று மேலே பாய்ந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக