கண்டி பிரதான வீதியின் பகதொழுவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த விபத்து பகதொழுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகதொழுவையிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் வரை சேவையில் ஈடுபடும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த போது, நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணிகளை ஏறிவந்த தனியார் பஸ் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து
ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த கடவளை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம்-6 மற்றும் தரம்-7 சேர்ந்த மாணவ மாணவிகள் 10 பேர் கயமுற்ற நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இரண்டு மாணவர்களும் 1 மாணவியுமாக மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக