மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிப பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழில் தனிமையிலிருந்த வயோதிப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப பெண்ணே கொலை
செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக