siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 ஜூலை, 2017

துன்னாலை பகுதியில்பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று 27.07.2017 தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக