ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பிரதேத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து வித்துக்குள்ளாகியுள்ளது
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள்
தெரிவித்தனர்
காயமடைந்த இருவரும் பிரவுஸ்வீக் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக