siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் முச்சக்கர வண்டி குடை சாய்ந்து இருவர் படுகாயம்

ஹற்றன் - மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே, நோர்வூட் - ரொக்குட் பகுதியில் குடைசாய்ந்து 
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக