siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 12 ஆகஸ்ட், 2017

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் தீக்குள் வீழ்ந்த பெண்!

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று 
தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.
காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக