யாழ்ப்பாணத்தில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த வர்த்தரொருவர் எதிர்பாராத மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி
உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் யாழ். கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது, வர்த்தக நிலையத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியை வழமை போன்று திறந்து
பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்குள்ளான அவர் தூக்கி வீசப்பட்டார். அயலவர்கள் அவரை மீட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
யாழ். கரணவாய் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாரான க.சிவகுமரன்(வயது- 42) என்பவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக