siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 ஜனவரி, 2020

காத்தான்குடியில் காரை தாறுமாறாக செலுத்திய யுவதி ஒருர் கொலை மூவர் படுகாயம்

பெண் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் வெள்ளிக்கிழமை (03.01.2020) காலை
 இடம்பெற்றதுட. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்றவர்களை மோதித்தள்ளியது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 
வயது 72 உடையவர் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்கு நின்றவேளை இவ்வாறு விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக