siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 ஜனவரி, 2020

கோர விபத்து முல்லைத்தீவில் இளம் தம்பதியை மோதித் தள்ளிய கடற்படை வாகனம்

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் வாகனம் மோ தியதில் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய கணவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.
வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையினருடைய வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் படுகாயம் அடைந்தவர் முள்ளிவாய்க்கால் உப தபாலக அதிபரான ஜீவன் டினுசா (வயது24) என்றும், உயிரிழந்த 
அவருடைய கணவரான துணுக்காயைச்சேர்ந்த கே.ஜீவன் (வயது 32) எனவும் தெரியவருகிறது.விபத்துடன் தொடர்புடைய சாரதியை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக