siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் சட்டத்தை 
மீறுபவர்கள் குறித்து பொலிஸ் பாதுகாப்பு படையினரும் விழிப்புடன், இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன 
தெரிவித்துள்ளார்.எப்படியிருப்பினும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் பிரதேசத்தில் உள்ள 
மக்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்தியாவசியம் அல்லது 
அவசிய நடவடிக்கைகளுக்காக பயணிக்கும் நபர்களுக்கு இந்தச் சட்டம் தாக்கம் செலுத்தாது என பிரதி பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.புதிய முறையின் ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முழுமையான நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக