siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 மே, 2024

பண்டத்தரிப் பில் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய பெண் கார் மோதி பலி

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 29-05-2024.அன்று  கணவருடன் வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 61 வயதுடைய சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகவீனமடைந்திருந்த 
நிலையில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள 
வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு , 
கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது , பின்னால் வேகமாக வந்த கார் இவர்களை
 மோதி தள்ளியுள்ளது.
இதன்போது குறித்த பெண் தூக்கி வீசப்பட்டு , படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக