siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 செப்டம்பர், 2024

நாட்டில் பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் ஒருவர் படுகாயம்

பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்று நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் லாரி முன்னால் சென்றதால் போலீசார் லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். லொறியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில்...

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

நாட்டில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் .29-09-2024.இன்று  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இந்த அபாயம் நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு...

சனி, 28 செப்டம்பர், 2024

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் இயங்க ஆரம்பித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று 27-09-2024.வெள்ளிக்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்ட போதிலும் ஆளணிப் பற்றாக்குறை,வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடக் கணக்கில் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.  இந்நிலையில்,...

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

யாழ் சாவகச்சேரியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் மரணம்

இளம் குடும்பஸ்தர் ஒருவர் திருணம் செய்து இரண்டு வருடங்களில்  பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .சாவகச்சேரி நூணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச்...

வியாழன், 26 செப்டம்பர், 2024

யாழ் அராலி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி முதியவர் படுகாயம்

யாழ் வட்டுக்கோட்டை அராலி பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில், அராலி அம்மன் கோவில் பகுதியில் இருந்து வந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது அரச பேருந்து மோதியுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயம்டைந்துள்ளதுடன்...

புதன், 25 செப்டம்பர், 2024

திருமதி கயூரன் ஜனனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.09.24

தோற்றம் -28.04-1985- மறைவு- 06-10-2023யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனிஅவர்களின் 1ம் ஆண்டு  நினைவஞ்சலி திதி .25.09.2024.புதன் கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெறும்  அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும் மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்  திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன்  அவர்களின் அன்புத்  தாயாரும்...

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டை கலிபோர்னியாவில் தடை செய்யும் சட்டம் நடைமுறை

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டைத் தடை செய்யும், கட்டுப்படுத்தும் சட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் மனநலப் பிரச்சினைகள், கற்றல் குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மற்ற 13 மாநிலங்கள், பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை, கட்டுப்பாடுகள் விதித்ததாகத்...

திங்கள், 23 செப்டம்பர், 2024

யாழ் அராலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர் படகில் சடலமாக மீட்பு

கடற்றொழிலுக்கு .22-09-2024.ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.23-09-2024. இன்று காலைவரை அவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்டவர்கள், பொன்னாலை கடலில் அவரது சடலம்...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது.இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை...

சனி, 21 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் செல்வி பொன்னுச்சாமி சறோஜினி தேவி 21.09.2024

துயர் பகிர்வு தோற்றம் 13-10-1941-மறைவு-21-09-2024யாழ். புத்தூர் மேற்கு நவற்கிரி நிலைவரையை  பிறப்பிடமாகவும்  கொழும்பில் வசித்து வந்த செல்வி பொன்னுச்சாமி  சறோஜினி தேவி   (இளைப்பாறிய யாழ் போதனா வயித்தியசாலையில் பணியாற்றிய தாதி )அவர்கள் 21-09-2024..சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் காலம் சென்ற  பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகளும்  அன்னாரின்  நல்லடக்கம், கொழும்பில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார்,...

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

கத்திக்குத்துத் தாக்குதலில் நெதர்லாந்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

நெதர்லாந்தில் ரோட்டர்டாமில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.கொலையாளி என்று கூறப்படும் நபர் கத்தியால் குத்தும் போது "அல்லாஹு அக்பர்" என்று கத்தினார் என்று சாட்சிகள் கூறுகின்றனர்.மைல்கல் எராஸ்மஸ் பாலம் அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ரோட்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் கொல்லப்பட்டார் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 33 வயது நபர் பலத்த காயம் அடைந்தார் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று...

வியாழன், 19 செப்டம்பர், 2024

இலங்கையர் சுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்ப்பு இரண்டு பேர் கைது

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  சுவிஸ் நாட்டின் கிளாட்ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே.18-09-2024. நேற்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் நாட்டை சேர்ந்த 40 மற்றும் 54 வயதான சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்பு Airbnb நிறுவனத்தால்...

மரண அறிவித்தல் திருமதி குணசுந்தரி(பேபி) தனபாலசுந்தரம்

விழி நீர் அஞ்சலி  மலர்வு- 01/06/1958- உதிர்வு -18/09/2024சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்கா குடும்பத்தைச் சேர்ந்த திருமதி குணசுந்தரி(பேபி) தனபாலசுந்தரம் சுவிஸ் நாட்டில்  அம்பிகையின் பாதம் அடைந்து விட்டார்!!!எல்லோராலும்  எந்நாளும் மறக்க முடியாத ஒரு நல்ல  தாய்.அம்பாளே துணை என வாழ்ந்த ஜீவன்.பேபி அன்ரி என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவர் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்....

புதன், 18 செப்டம்பர், 2024

நாட்டில் குளியாப்பிட்டியவில் தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்

• நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எவருக்கும் நிறுத்த இடமளியேன்.• 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 10 வருடங்கள் தாமதமானதால் இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.• வெஸ்டர்ன் ஒடோமொபைல் புதிய தொழிற்சாலையினால் குளியாப்பிட்டியுடன் நாடும் பெரும் அபிவிருத்தி காணும் – ஜனாதிபதி.நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய...

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

ரொரன்றோவில் பிறந்தநாள் அன்று நீரில் மூழ்கி உயிரிழந்த இந்திய மாணவர்

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், ஏரி ஒன்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகிய விடயம் அவரது குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான ப்ரனீத் என்னும் மாணவர், கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். ப்ரனீத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரருடன் ரொரன்றோவிலுள்ள ஏரி ஒன்றிற்குச் சென்றுள்ளார் அவர்.மற்றவர்கள் படகில் பயணிக்க, தான் மட்டும்...

திங்கள், 16 செப்டம்பர், 2024

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் ராகம பகுதியில் தடம் புரண்டுள்ளது

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயில் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான ரயில் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.  ராகம சந்தியை கடந்து செல்லவிருந்த அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.என்பதாகும்&nb...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் கடைக்காரர் சுட்டுக்கொலை

சிகரெட் விற்க மறுத்த மளிகைக்கடைக்காரரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . அவ்வூரைச் சேர்ந்த சாரதா யாதவ், 55, தம்முடைய மளிகைக்கடைக்கு வெளியே படுத்திருந்தார்.அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அவரை எழுப்பி சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.அதற்கு, கடையின் சாவி வீட்டிற்குள் உள்ளது என்றும் நள்ளிரவு நேரத்தில்...

சனி, 14 செப்டம்பர், 2024

ரயிலுடன் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் மரணம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து.14-09-2024. இன்று  பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலிலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..என்பது குறிப்பிடத்தக்கது &nb...

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாட்டில் களுவாஞ்சிகுடி மயானத்தில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளன

நாட்டில் மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...

வியாழன், 12 செப்டம்பர், 2024

எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரசின் பரவல் பாகிஸ்தான் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரசின் பரவல் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. இதுபற்றி கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சுகாதார மந்திரி காசிம் அலி ஷா வெளியிட்டு உள்ள செய்தியில், சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு 33 வயதுடைய நபர் கடந்த 7ந்தேதி வந்து சேர்ந்துள்ளார்.இதன்பின் பெஷாவர் நகரில் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் தனியார் கிளினிக்...

புதன், 11 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் திரு கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர் 10.09.24

துயர் பகிர்வு தோற்றம் 07-06-1950-மறைவு-10-09-2024யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கொழும்பில் வசித்து வந்த அமரர் கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர்10-09-2024அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் காலம் சென்ற கதிரிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனுமாவார் அன்னாரின்  நல்லடக்கம்,11-09-2024.அன்று கொழும்பில் நடைபெற்றது இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல் குடும்பத்தினர்  ஆழ்ந்த...

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கையில் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.எடைக் குறைவு, வளர்ச்சி குன்றிய நிலை, வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு - முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது - குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.2,500 கிராம் அல்லது அதற்கும் குறைவான...

திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குந்திக்குளம் பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் 07-09-2024 சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் குந்திக்குளம், மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கணவன் - மனைவி...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

இலங்கையில் இருவேறு பகுதிகளில் யானை தாக்குதல் இருவர் பலி

இலங்கையில் கல்முனை மற்றும் கபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  இவர்களில் ஒருவர் கல்முனை பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய புட்லா என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கபிதிகொல்லாவ, கன்வுட்டுவ மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது காட்டு யானை தாக்கியதில்...