siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 மே, 2016

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!!

இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,
சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.
இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் – வரி திருத்தத்தால்!

மே மாதம் 2ம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூற முடியாது என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதார நிலைமையும் இதனை பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 6 ஏப்ரல், 2016

சாரதிகளே கவனம் !மது அருந்தி வாகனம் செலுத்தினால் கைது

சித்திரை புதுவருடத்தின்  போது வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக பொலிஸ்  விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ்
  தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ,பொலிஸ்  சீருடையிலும் , சிவில் உடையிலும் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபடுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 30 மார்ச், 2016

டெலிபோனுக்கு வாட்ஸ் அப்பில் இருந்து பேசும் வசதி?

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை 
கண் இமைக்கும் 
நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது வாட்ஸ் அப். உலக அளவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  நூறு கோடியாக 
உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் 
அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 25 மார்ச், 2016

மீண்டும் தீவிரமடைகின்றது டெங்கு நோய்

இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2014இல் 47 ஆயிரம் நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் 96 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்தில் 29,770 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை
 ஒரு பில்லியன்
 ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இவ்வருடத்தில் இந்த நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 29 தொடக்கம் ஏப்ரல் 4 வரை டெங்கு குடம்பிகளை அழிப்பதற்கான தேசிய மட்டத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார சேவை அமைச்சு அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் போன்றவை பங்கேற்கும் என்று
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 22 மார்ச், 2016

திருடர்களை வெடி கொழுத்தி துரத்திய மக்கள்!

 நீர்வேலியில்   திருடர்கள் தொல்லை! வெடி கொழுத்தி துரத்திய மக்கள்
நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
நேற்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும் விழிப்படையச் செய்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் கேட்ட பட்டாசு சத்தத்தினால் மக்கள் விழிப்படைந்து பீதியடைந்தனர்.
திருடர்களின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் பதற்றத்துடனும், பீதியுடனும் இரவுப் பொழுதைக் கழிப்பதால் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்தும் பட்டாசுகளை வெடிக்க வைக்கும் புதிய வியூகத்தை மக்கள் கையாள்வதினால் ஏனைய மக்கள் உசாரடைந்தும் 
வருகின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவும் நீர்வேலி வில்லுமதவடியில் வீடு ஒன்றில் திருடுவதற்கு திருட்டுக் கும்பலொன்று முயற்சித்த போது அவர்களின் சத்தத்தினால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட திருடர்கள் ஓடிச்சென்றுள்ளனர்.
மேலும் இப்பிரதேசங்களின் மக்களின் இரவு பாதுகாப்பிற்காக விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால் இதுவரை கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 மார்ச், 2016

தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான் அதிர்ச்சி சம்­பவம்?

                      விரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­காரர். இதனை வாங்கி சாப்­பிட்­டவர் அதிர்ச்­சியில் மயங்­கியே 
விழுந்­து­விட்டார்.
விரு­து­ந­கரில் துப்­பு­ரவுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ‌பணி­யா­ளர்கள் சில‌ர், அங்­குள்ள ஒரு கடை­யில் சாப்­பிட்டுள்­ளனர். அப்­போது‌ ஓணா­னுடன் இருந்த சமோ­சாவை ‌சாப்­பிட்ட பணி­யாளர் ஜெயக்­கனி என்­பவர் மயங்கி விழுந்தார். இது­கு‌‌­றித்து நக‌­ராட்சி சுகா­தார ஆய்­வா­ள‌­ருக்கு தகவல்
 தெரி­விக்­கப்­பட்­டதை‌
 அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­களை பறி­முதல் செய்து அழித்­துள்­ளார். மேலும், அரு­கி­லி­ருந்த கடை­களில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சமோ­சாக்­க­ளையும் கைப்­பற்றி அழித்­துள்­ளார். சமோ­சாவில் ஓணான் இருந்த சம்­பவம் அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியுள்­ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 மார்ச், 2016

வைத்தியசாலை மாடியிலிருந்து பாய்ந்து, நபரொருவர் தற்கொலை!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நபரொருவர் 12 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் தலவத்துகொட, மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெகுவிரைவில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார 
தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே 
இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 4 மார்ச், 2016

சீவல் தொழிலாளர்களுக்கு முட்டிகள் வழங்கப்பட்டது ?

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகச் சீவல் தொழிலாளர்கள் 25 பேருக்கு 500 ரூபா பெறுமதியான 10 முட்டிகள் வழங்கப்பட்டுள்ளன என பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.வரதராஜன் 
தெரிவித்தார்.
பனங்கட்டி உற்பத்தியை உக்குவிக்கும் முகமாக அங்கத்தவர் 25 பேருக்கு முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கூடுதலான பனங்கட்டியை உற்பத்தி செய்யும் நோக்கோடு சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த உதவிகள் 
வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் பனங்கள் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பருவ காலமாகும். இந்தக் காலத்தில் பனங்கட்டித் தொழில் மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை
 காணப்படுகின்றது.
அதையடுத்து சீவல் தொழிலாளர்களுக்கு சுண்ணாம்பு, சீவல் உபகரணங்கள் என்பன வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 மார்ச், 2016

நீங்கள் இளமையுடன் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கு?.

ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும்.
இப்போது பனிக்காலம். பனிக்காலத்தில் நம் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதற்கு தக்கப்படி உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏற்ற காய், கனி, கிழங்கு வகைகளை இயற்கை நமக்கு தருகிறது. இந்த வகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை 
கொடுக்கும்.
அதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் 
தடுக்கப்படுகிறது.
கண்பார்வை கூர்மையாக்கும். இதனை சாப்பிட்ட உடன் பசி அடங்கிய நிறைவு ஏற்படும். அடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் விரத காலங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த கிழங்கின் மாவும் சிறந்த உணவுப்பொருள்தான். அதில் பல விதமான பிஸ்கெட், கேக், ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவும் தயாராகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 மார்ச், 2016

உயர் பெருஞ்சாலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பில் இரண்டு உயர்ந்த பெருந்தெருக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
கொழும்புக்குள் நாளாந்தம் அதிகரித்து வரும் வாகனங்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே இந்த திட்டத்துக்கு ஒப்புதல் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு உயர்ந்த பெருந்தெரு களனி முதல் ராஜகிரிய வரையிலான பகுதிக்கு 6.9 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது.
அது பத்தரமுல்லை, மாலபோ அத்துருகிரிய மற்றும் வெளியக சுற்றுவீதி ஆகியவற்றுடன் இணைக்கப்படவுள்ளது.
இரண்டாவது உயர் பெருந்தெரு 5.8 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதாக களனி பாலம் முதல் கொழும்பு கோட்டை வரைக்கும் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய அரசாங்கம் ஆகியன நிதியுதவியை வழங்கவுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 29 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் கணவரை தூக்கில்இடத்தீர்ப்பளித்துள்ளர் ?

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார். யாழ்.போதனா 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். விளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில்
 இடம்பெற்று வந்தது.
மேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு .யாழில்.மாணவி தற்கொலை!!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஐங்கரன் அனுசியா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை 
செய்துள்ளார்.
நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அரசாங்கம் அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே தாம் இதனைக் கருதுவதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பியூலன்ஸ் சேவையை இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதன் ஊடாக இந்த தனியார் மயப்படுத்தல் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது இலவசமாக பெற்றுக் கொள்ளப்படுகின்ற இந்த சேவை எதிர்வரும் காலங்களில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
கூறியுள்ளார்.
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என முன்னிலை சோஷலிஸக் கட்சி அழைப்பு 
விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 25 பிப்ரவரி, 2016

ஹரிஷ்ணவியின் படுகொலை: அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது !

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர 
உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க தேவையான மூலக் கூறுகள் சாட்சியாக ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 14) கடந்த செவ்வாய்கிழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார். தாயார் தொழிலுக்கும் சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.15 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை 
முடிந்து வந்த போது 
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டார். இந் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்?

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
1. கண் பார்வை அதிகரிக்கும்
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
2. என்றும் இளமையாக
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.
3. மாரடைப்புக்கு குட்பை
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.
4. புற்று நோய்க்கு 
கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
5. பள பள பற்கள்
கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
இனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஐங்­க­ர­நேசனிற்கு மல்­லாகம் நீதி­மன்றம் பிடியாணை!

சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான விட­யத்தில் வட­மாகாண சபையால் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என விவ­சாய அமைச்சர் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பாக ஆய்வு அறிக்கை வெளியிட்­டது ஏன் என மல்­லாகம் நீதி­மன்றம் கேள்வி 
எழுப்­பி­யுள்­ளது.
இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது,சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில்­ உள்ள தண்­ணீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான வழக்கு நீதிவான் ஏ.ஜுட்சன் முன்­னி­லையில் நேற்று முன்­தினம் மல்­லா­கத்தில் இடம்­பெற்­றது. கடந்த தவ­ணை­யின்­போது நேற்­று­முன்­தினம் 
ஆஜ­ரா­க­வேண்­டிய விவ­சாய துறை
அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் நீதி­மன்றில் சமூ­க­ம­ளிக்­க­வில்லை. அமைச்சர் சார்­பாக உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சமூ­க­ம­ளித்­தமை தொடர்­பாக அதனை ஏற்க மறுத்து நீதி­மன்று உத்­தி­யோ­கத்­தரை எச்­ச­ரிக்கை செய்­த­துடன் ஐங்­க­ர­நே­ச­னுக்கு பிடி­யாணை பிறப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் 
தெரி­வித்­தது.
இதன்­போது ஐங்­க­ர­நேசன் சார்பில் சட்­டத்­த­ரணி வர­த­ராசா முன்­னி­லை­யானார். பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்குத் தண்ணீர் வழங்­க­வேண்­டிய கடப்­பாடு வட­மா­காண சபைக்கு இல்லை. அது மத்­திய அரசின் பொறுப்பு.
மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் தான் வட­மா­காண சபை வழங்­கி­யது என்று சட்­டத்­த­ரணி வர­த­ராசா தெரி­வித்­த­மை­ தொடர்­பாக நீதி­மன்று கேள்வி 
எழுப்­பி­யுள்­ளது.
 மத்­திய அரசு பொறுப்பு என்றால் எதற்­காக நிபு­ணர்­களை நிய­மித்து ஆய்­வு­களை மேற்­கொண்­டனர்? அதனை ஏன் வெளிப்­ப­டுத்­தினர்? இதற்­கான பதில்­களை அடுத்த தவ­ணையில் விவ­சாய அமைச்சர் நீதி­மன்றில் நேரில் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
குறித்த வழக்­கா­னது எதிர்­வரும் 17ஆம் திக­திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் விவசாய அமைச்சர் மற்றும் நீர்வளச் சபையின் பொறு-ப்ப-திகாரி இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தர விடப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 பிப்ரவரி, 2016

சங்கிலியை திருட முயன்ற மாணவவன் ஆசிரியையின் துனிச்சலால் முறியடிப்பு!

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை 
காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த 
நிலையில், 
சீருடை அணிந்த இளைஞன் ஒருவனும், வேறு ஒரு இளைஞனும் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த ஆசிரியரின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 பிப்ரவரி, 2016

யாழ்.குடாநாட்டு வான்பரப்பில்இன்றும் வட்டமிட்ட கிபிர்!

யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை  மும்முறை வட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது. அன்று பெரிதாக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றவில்லை 
ஆனால் இன்றைய தினம் 
யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை  கிபிர் போர் விமானம் வட்டமிட்டதால் மக்கள் மத்தியில்  பதற்றமான சூழ்நிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 17 பிப்ரவரி, 2016

நாட்டில் கையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசிக் கட்டணத்தை செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது.
சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 
அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்குள்ளும், வெளியார் தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கிடையிலும் பேசும் கட்டணம் சமப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
 குறிப்பிடப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பருத்தித்துறையிலிருந்து 773 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மூளாய், பொன்னாலைக்கான 773 ஆம் பாதை இலக்க பஸ் சேவை கடந்த 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
தினமும் காலை 5.45 மணிக்கும் பிற்பகல் 2.15 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்தும் காலை 8 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் பொன்னாலையிலிருந்தும் இருசேவைகள் இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை இ.போ.ச. பணிமனை முகாமையாளர் 
கே.கந்தசாமி 
தெரிவித்தார். கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தினால் தடைப்பட்டிருந்த இச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து 30 ஆண்டு காலஇடைவெளிக்குப் பின்னர் இச் சேவை மீளவும்
 ஆரம்பிக்கப்பட்டுள்ளது
. இச்சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி பருத்தித்துறையிலிருந்து மந்திகை, நெல்லியடி, குஞ்சர் கடை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, அச்சுவேலி, புத்தூர், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம், கீரிமலை, சேந்தாங்குளம், விளான், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய் ஊடாக பொன்னாலை வரை இடம்பெற்றறு, 
வருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2016

வீட்டை உடைத்து பெறுமதியான பணம், நகை கொள்ளை!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதன் வீதி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உடைத்து வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 
வீட்டில் இருந்த 
5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விமானம் நடுவானில் கோளாறானது : விமானத்தின் போக்கில் சென்ற விமானி

பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரோட்டில் தரையிரங்கியுள்ளது.
40 வயதுடைய விமானி ஒருவர், சிறிய ரக விமானம் ஒன்றினை, Seine-et-Marne என்ற பிரெஞ்சு துறையில் இருந்து எடுத்துக்கொண்டு 
சென்றுள்ளார்.
அப்போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு, தாறுமாறாக ஓடியுள்ளது.
விமானத்தின் போக்கில் சென்ற விமானியும் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கையில், Giremoutiers மற்றும் Mouroux இரண்டிற்குமிடையேயான ரோட்டில் தரையிரங்கியது.
ஆனால், தீவிர காயங்கள் எதுவும் ஏற்படாமல் விமானி உயிர்பிழைத்துள்ளார், புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுவர்க்கு பிச்சை எடுத்து உதவும் பெரியவர்!!!

பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களை கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
குஜராத் மாநிலத்தின் மெக்னசா என்ற சிறு கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு செல்லும் கிம்ஜிபாய் என்ற முதியவர், அங்கு படித்துவரும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் பேனா, பென்சில்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பது வழக்கம்.
இந்த முறை அங்கன்வாடிக்கு சென்ற முதியவர், தங்கத்தோடு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார், அந்த தங்கத்தோட்டினை 10 குழந்தைகளுக்கு அன்போடு வழங்கியுள்ளார்.
இவர், அங்கு செல்வதற்கு முன்பாக 10 குழந்தைகளை தெரிவு செய்துவைக்குமாறு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார், அதன்படியே தெரிவு செய்யப்பட்டிருந்த அந்த குழந்தைகளுக்கு தங்கத்தோட்டினை வழங்கியுள்ளார்.
இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் செல்வந்தர் கிடையாது, பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தினை வைத்து கடந்த 13 ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இந்நபரின் உதவி மனப்பான்மையை புரிந்துகொண்டு, நகைக்கடைக்காரரும் ரூ.13 ஆயிரம் மதிக்கத்தக்க தங்கத்தோட்டின் விலையை 3 ஆயிரமாக குறைத்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை
 செய்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>